11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாங்காடு அடுத்த கொளப்பாக் கத்தில் லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. மொட்டு வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொலைவில் உள்ள மாணவர்கள் வந்துசெல்ல, பள்ளி சார்பில் பேருந்து, வேன் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் மலர் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை, பள்ளியின் வேன் நடத்துநர் தன்னிடம் தவறாக நடந்ததாக கூறி, நேற்று பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இதுபற்றி, வேன் நடத்துநர் பாஸ்கரிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை அடித்து, உதைத்து பள்ளிக்கு அழைத்து வந்தனர். சம்பவம் குறித்து மாங்காடு காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இதுபற்றிய தகவல் மற்ற பெற்றோர்கள் நடுவே பரவியது. தங்கள் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டிருக் குமோ என்ற ஐயத்;தில், 200 க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளி முன்பு திரண்டனர். பள்ளியை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகி உடனே அங்கு வந்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று பெற்றோர் கூறினர். 'சம்பந்தப்பட்ட வேன் ஊழியர் பாஸ்கர் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். வேறு ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பள்ளி நிர்வாகமும், காவல் துறையும் உறுதி அளித்தனர். இதையேற்று, பெற்றோர், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறிய போது, 'பள்ளி வேனில் நடத்துநராக வேலை செய்யும் பாஸ்கர், பள்ளி சிறுமிகள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பள்ளி நிர்வாகத்தை நம்பிதான் குழந்தைகளை பேருந்து, வேனில் அனுப்புகிறோம். ஊழியர்கள் கண்ணியமாக நடந்துகொள்கிறார் களா என்பதை பள்ளி நிர்வாகம்தான் கண்காணிக்க வேண்டும். காவல், கல்வி, போக்குவரத்து துறைகள் இணைந்து, இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றனர். இதற்கிடையில், வேன் ஊழியரான கொளப்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். ஐம்பது விழுக்காடு பெற்றோர்கள் கல்வி தரமாக இருக்கும் என்று கருதி தனியார் பள்ளிகளை நாடினாலும், ஐம்பது விழுக்காடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, அரசு பள்ளிகளில் கேள்வி கேட்டு பாதுகாப்பு நிலையை உறுதி செய்து கொள்ள முடியாதே, என்கிற ஒரே காரணத்திற்காகவே தனியார் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்பதை தனியார் பள்ளி நிருவாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,861.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



