07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நமது தமிழ் முன்னோர், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று ஒவ்வொரு இனத்திற்குமான தலையாய அடையாளம் மொழி என்று நிறுவி, தங்கள் மொழியான தமிழ்மொழிக்காக, தமிழ்க்;கழகம் வைத்து, தம்கண்ணாக தமிழ்மொழியை வளர்த்துக் காத்தனர். இலக்கண நெறியை பின்பற்றினால் மட்டுமே செந்தமிழ் மொழி. இல்லையெனில் கொடுந்தமிழ் மொழி என்று பட்டியல் இட்டனர். கொடுந்தமிழ் மொழி பட்டியலுக்கு வந்து பின்னர் வேறு மொழிகளாகவே மாறிவிட்ட மொழிகள் தாம் தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் எல்லாம். தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென்-கொடுந்தமிழ் மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன. குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை உருவாகும் என, தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, மொழியியல் துறை நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. யுனெஸ்கோவும் இதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் காணாமல் போய்விடும். இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில், 11 மொழிகளும், மணிப்பூரில், ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,703
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



