அதிமுக கூட்டணியில் அதிக இடம் மிரட்டிப்பெறும் பொருட்டே அமித்சா தமிழகம் வந்ததான செய்தி பேசுபொருளாய் இருக்கிற நிலையில்- திமுகவைச் சீண்;டிட, திமுக ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில் உங்கள் தமிழ்நாட்டிற்கு பெற்ற திட்டங்கள் என்னென்ன சொல்லமுடியுமா என்று ஒரு மொக்கையான கேள்வியைக் கேட்டு சென்றிருக்கிறார் அமித்சா. தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திராவிட முன்னேற்றக் கழகத்தால் முடியும் என்று திமுக அமித்சாவுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. 08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்- அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அதிக இடம் மிரட்டிப்பெறும் பொருட்டே அமித்சா தமிழகம் வந்ததான செய்தி பேசுபொருளாய் இருக்கிற நிலையில்- திமுகவைச் சீண்;டிட, திமுக ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில் உங்கள் தமிழ்நாட்டிற்கு பெற்ற திட்டங்கள் என்னென்ன சொல்லமுடியுமா என்று ஒரு மொக்கையான கேள்வியைக் கேட்டு சென்றிருக்கிறார் அமித்சா. இந்த நிலையில் திமுகவின் சார்பாக டி.ஆர். பாலு அமித்சாவுக்கு பதிலடி கொடுக்கும்முகமாக கீழ்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசில் இருந்த போது திமுக தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என்று நேற்று அதிமுகவிடம் கூட்டணி மிரட்டல் விடுக்க வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்சா அவர்கள் கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால் - நேருக்கு நேர் மேடை அமைத்து அமித்சா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திராவிட முன்னேற்றக் கழகத்தால் முடியும். அந்தக் காலகட்டத்தில் குஜராத்தில் அமைச்சராக இருந்த அமித்சாவிற்கு திமுகவின் சாதனைகள் தெரியாது என்பதால் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், ஒன்றிய பாஜக அரசு – அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்குச் செய்தது என்ன? சமூகநீதியை அழித்தது; இட ஒதுக்கீட்டை பாழ்படுத்தும் வகையில் செயல்படுவது; நீட் தேர்வு வேண்டாம் என்னும் சட்டவரைவை நிராகரித்தது; ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி கழிமுகத்தைப் பாலைவனமாக்கியது; தமிழ் சொம்மொழி நிறுவனத்தை முடக்கியது; ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்களைச் சுட்டுப் பொசுக்கியது. உதய் திட்டம், புதிய மின்சாரத் திருத்தச் சட்டங்கள் மூலம் மூலம் வேளாண் பெருமக்களின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி; பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் நகரங்களை எல்லாம் வீழ்த்தியது; எந்தப் பேரிடருக்கும் நிதி கொடுக்காதது - மாநிலச் சட்டமன்றத்தின் உணர்வுகளை மதிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்படுவது - ஏன், ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க அனுப்பிய தமிழக அரசின் தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க மறுப்பது - என்று ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு இழைத்துள்ள அடுக்கடுக்கான துரோகங்களைப் பட்டியலிட முடியும். அதற்குத் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
1.சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழகத்தில் இருந்து சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கை ஆதரித்த போது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம்.
2.தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றம் அமைத்திருக்கிறோம்.
3.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைஅமைச்சராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயிடம் ‘காமராஜருக்கு நினைவு மண்டபம்.
4.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம்.
5.சேலம் உருக்காலை தனியார் மயமாவதை தடுத்து நிறுத்தியிருக்கிறோம்.
6.மன்மோகன்சிங் ஆட்சியில் தமிழகம் மன்மோகன்சிங்கை ஆதரித்த போது, சிறுபான்மையினர் மீது அடக்குமுறை காட்டும் பொடா சட்டத்தை ரத்து செய்திருக்கிறோம்.
7.சென்வாட் வரி நீக்கம் செய்திருக்கிறோம்.
8.காவிரி இறுதித் தீர்ப்பை பெற்றது.
9.அன்னைத் தமிழுக்கு செம்மொழி தகுதி பெற்றது.
10.காமராஜர் - எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது.
11.செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் அமைத்தது
12. நான்காயிரத்து அறுநூற்று எழுபத்தியாறு கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3276 கி.மீ. நெடுஞ்சாலைகள் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலைகளாகவும், மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டது, 13.சென்னை அருகில் உள்ள ஒரகடத்தில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் தேசிய ஆட்டோமொபைல் நிறுவனமும், இதர உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தியது,
14.ஆயிரத்து ஐநூற்று ஐம்பத்து மூன்று கோடி மதிப்பீட்டில் சேலம் ரோலிங் மில் பன்னாட்டு தரத்திற்கு தரம் உயர்த்தியது, 15.தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது,
16.சேலத்திற்கென தனி தொடர்வண்டி கோட்டம் ஏற்படுத்தியது, 17.நூற்றி இருபது கோடி மதிப்பீட்டில் சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியது என நிறைய செய்திருக்கிறோம்.
18.ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கியது. எல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக பங்கேற்ற நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
19.இவை தவிர சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கும் ரூ.908 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டம்,
20.சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் ரூ.640 கோடியில் திட்டம். 21.அனைத்து மீட்டர் கேஜ் தொடர்வண்டிப் பாதைகளையும அகலவழி தொடர்வண்டிப் பாதைகளாக மாற்ற ஒப்புதல்,
22.தொன்னூறு தொடர்வண்டி மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைத்தல் போன்றவற்றைச் சாதித்தது. 23.நேற்று நீங்கள் கூட்டணிக்கு அதிக இடம் கேட்டு சென்னைக்கு வந்து- அடிக்கல் நாட்டினீரே மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் - இப்படியொரு திட்டத்தை முதன் முதலில் சென்னைக்குக் கொண்டு வந்து - ரூபாய் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை தொடக்கி வைத்து - முக்கால்வாசிப் பணிகளை முடித்து வைத்தது தமிழ்நாட்டிலட்சியிலும் - ஒன்றிய அரசில் பங்கேற்றும் இருந்த போது திராவிட முன்னேற்றக் கழகம் செய்த சாதனைகள்தாம்.
24.தமிழ்நாட்டில் ரூபாய் ஆயிரத்து 928 கோடி மதிப்பில் ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி, பன்னாட்டுத் தரத்தில் தேசிய கடல்சார் பல்கலைகழகம் அமைத்து, திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்கியது.
25.திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தோற்றுவித்தது.
26.ஆசியாவிலேயே முதல்முறையாகச் சென்னையில் ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் எம்பவரிங் பர்சன்ஸ் வித் மல்டிப்பிள் டிஸ்எபிலிட்டீஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி - உள்துறையின் கீழ் வரும் ஒன்றிய அதிரடிப்படை மையம் ஒன்றைத் தமிழகத்தில் சாதித்துக் காட்டியது திமுக ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் - பழைய விவரங்கள் தெரிந்தவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
27.மூன்று வேளாண் திட்டங்களைக் கொண்டு வந்து நாடு முழுவதும் வேளாண் பெருமக்களின் போராட்டக் களத்தை உருவாக்கியது நடப்பு ஒன்றிய பாஜக அரசும், அதிமுக அரசும். வேளாண் பெருமக்களின் கடன்களை தள்ளுபடியே செய்ய முடியாது என்று கூறி வருகிறது பாஜக அரசு. ஆனால் ரூ.72,000 கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க. பங்கேற்றிருந்த போதுதான்.
28.சமூகநீதி என்றாலே பாஜகவிற்கு கசக்கிறது. அந்த நிலையின்றி – ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்தது திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்று இருந்த காலத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



