சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி போன்ற சோதிடப்பலன் அலசல்கள் போல, இன்னும் ஏழே நாட்களில் நிகழவிருக்கிற சசிபெயர்ச்சி குறித்த அரசியல் பலன் அலசல்கள் தமிழகம் முழுவதும் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 07,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பன்னீர் செல்வத்திற்கு எதிரான சசிகலா ஆட்ட நகர்த்தலில், முதல்வர் பதவி கிடைக்கப் பெற்றவர்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். பாஜக ஆட்ட நகர்த்தலில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டு, பன்னீரை எடப்பாடி அங்கீகரிக்கும் களமாடல் நிகழ்ந்தது. இன்னும் ஏழுநாட்களில் சசிகலா சிறையில் இருந்து அதிமுக அரசியல் களத்திற்கு பெயரும் நிகழ்வு உறுதியாகியுள்ளது. சசிகலாவின் நிபந்தனைகள், தினகரன் கமுக்கச் சந்திப்பு, முதல்வர் பழனிசாமியின் டெல்லி பயணம் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக நகர்த்தப்படுகின்றன காய்கள். சசிகலாவுடன் பாஜக பேசி முடித்து விட்டதாகவும், அமமுக- அதிமுக ஒன்றிணையும் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் தீயாக்கப்பட்டுவரும் சூழலில், சசிகலா வட்டத்தில் என்ன நடக்கிறது என அலசுவோம். அமமுக- அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். கடந்த 49 ஆண்டுகளாகத் தமிழர்களுக்காக உழைத்த இயக்கம் உடையக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், அதற்காக தன் பிடியை விட்டுத்தரவும் அவர் அணியமாக இல்லை. கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்பதற்கு ஏழு நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார். 1.அதிமுகவில் முன்பு இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டும். சசிகலாவின் இந்த ஏழு நிபந்தனைகளால் ஆடிப்போயிருப்பது பன்னீர்செல்வம்தான் என்கிறார்கள். சசிகலா மீண்டும் கட்சிக்குள் வந்தால், எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, தான் முதல்வர் வேட்பாளராகிவிடலாம் என்ற நினைப்பிலிருந்தார் பன்னீர். இதற்காக தினகரன் தரப்புக்கும் தூதுவிட்டிருந்தார். இந்த நம்பிக்கையில்தான், ‘அண்ணன் தம்பி பிரச்னையைப் பேசித் தீர்ப்போம்’ என்று மறைமுக அழைப்பும் விடுத்தார். இப்போது, பன்னீர் பெரிதும் நம்பிய ஒருங்கிணைப்பாளர் பதவியையே ஒழிக்கும்படி சசிகலா கட்டளையிட்டிருப்பது, பன்னீரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதன்படி பார்த்தால்- சசிகலாவால் அளிக்கப்பட்ட பொருளாளர் பொறுப்பு திண்டுக்கல் சீனிவாசனுக்கும், அவைத்தலைவர் பொறுப்பு செங்கோட்டையனுக்கும் மீண்டும் வரும். பன்னீருக்கு எதுவும் மிஞ்சுமா என்று தெரியவில்லை என்பதாக சசிபெயர்ச்சி பலன்கள் கணித்து பேசப்பட்டு வருகின்றன. துக்ளக் குருமூர்த்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, தனக்கெதிராக பன்னீர்செல்வம் யுத்தம் நடத்தியதை இன்றும் மறக்கவில்லையாம் சசிகலா. அவர் சிறை செல்வதற்கு முன்னதாக செயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த சத்தியத்தோடு பன்னீரின் தொடர்பும் முறிந்துபோனதாகக் கூறுகிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள். அதேசமயம், எடப்பாடியை சசிகலா விட்டுக்கொடுத்ததில்லை என்கிறார்கள். முன்னர் ஒருமுறை தன்னைச் சந்தித்த மன்னார்குடி நண்பர் ஒருவரிடம், ‘‘அக்காகிட்ட 33 ஆண்டுகள் அரசியல் பாடம் படிச்சவ நான். என்னையே இந்தப் பாடு படுத்துறாங்களே? பாவம், எடப்பாடியை என்னவெல்லாம் செஞ்சிருப்பாங்க. டெல்லிக்கு எடப்பாடி அடிபணியலைன்னா, அவரின் அரசியல் வாழ்க்கை முடிஞ்சிருக்கும். கட்சியும் சின்னாபின்னமாகியிருக்கும். இதுல அவரைக் குத்தம் சொல்றதுல எந்த நியாயமும் இல்லை’’ என்றாராம் சசிகலா. இதையடுத்துத்தான், தனக்கான நேரம் வரும் வரை காத்திருப்பது என்பதில் தீர்மானமாக இருக்கும் சசிகலா, முதலில் அதிகாரத்தைக் கைப்பற்ற காய்நகர்த்த தொடங்கி விட்டார் என்பதான பலன்களும் கணிக்கப்படுகின்றன. சசிகலாவைக் கையிலெடுக்க வேண்டுமென்றால், அவரைச் சிறையில் தள்ளி, அதிமுகவை உடைத்து, மீண்டும் சேர்க்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்விக்கு பாஜகதரப்பு, “திமுகவின் வெற்றி விழுக்காட்டை குறைப்பதற்கு சசிகலா, பன்னீர், எடப்பாடி மூவருமே கட்டாயம். அண்மையில் ஒன்றிய உளவுத்துறை கொடுத்த அறிக்கையில், ‘சசிகலா இருந்தால் மட்டுமே கழிமுகத்திலும் தென்மாவட்டத்திலும் அதிமுகவுக்கு பலம். அமமுக பிரிந்து நிற்பதால், சுமார் 124 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருக்கிறது’ என்று கூறியிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துவிட்டால், அதன் பிறகு பாஜக இங்கு அரசியல் கணக்கைத் தொடங்குவது மிகக் கடினம். அதனால், முடிந்தவரை திமுக பெரும்பான்மை பெறுவதை டெல்லி தடுக்கப் பார்க்கிறது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என்று எங்குமே ஒரு மாநிலக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற பாஜக விடவில்லை. தமிழ்நாட்டிலும் அதைச் செய்ய முற்படுகிறார்கள். இதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூறாவளியை ஏற்படுத்தி, திமுக ஆட்சிக்கு வருவதைக்கூடத் தடுக்க முடியும். கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரசால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. சிறு கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவே ஆட்சியைப் பிடித்தது. அது தமிழகத்திலும் அரங்கேறலாம்” என்கிறது பாஜக கணிப்பு. கட்சிகள் இணையுமா, இணையாதா என்பதையெல்லாம் அடுத்தடுத்த நாட்களின் அரசியல் சூழலே முடிவு செய்யும். ஆனாலும், அரசியல் சதுரங்கத்தில் இப்போது சசிகலாவின் முறை. எதிராளிகளுக்கு முற்றுகை வைக்கும் வாய்ப்பு இம்முறை அவருக்குக் கிடைத்திருக்கிறது. அவரது காய்நகர்த்தலைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு மாறும்.
இன்று புதியம் கிழமை. அடுத்த புதியம் கிழமையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா விடுதலையாவது உறுதியாகிவிட்டதால், அதன் தாக்கம் அதிமுகவில் இப்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக அமைப்புச் செயலாளரான கோகுல இந்திரா, ‘செயலலிதாவுக்குத் துணையாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா’ என்று புகழாரம் சூட்டியதும், அண்மையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், அதிமுக- அமமுகவிற்கு இடையே நடப்பது பங்காளிச் சண்டை. இருவரும் இணையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றதும், சசிபெயர்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகள்.
2.பழையபடி, ஒற்றைத் தலைமையாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவர வேண்டும்; அதுவும் கட்சித் தேர்தலை நடத்தி, தொண்டர்களின் ஒருமித்த ஆதரவுடன் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும்.
3.இப்போது அமமுகவில் இருப்பவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே அதிமுகவில் என்ன கட்சிப் பதவியில் இருந்தார்களோ அதே பதவியை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
4.வழிகாட்டுதல்குழு உள்ளிட்ட புதிய குழுக்களைக் கலைக்க வேண்டும்.
5.முதல்வர் வேட்பாளரைக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் கூடி முடிவு செய்யும். கூட்டணியையும் அப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.
6.அதிமுகவிலிருந்து அமமுகவுக்குச் சென்று பதவி இழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.
7.அமமுக அதிமுக என இரு தரப்பிலும் யாராக இருந்தாலும் சின்னம் உள்ளிட்ட கட்சி தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இவைதான் சசிகலா சொன்ன ஏழு நிபந்தனைகள். இந்த ஏழு நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாகத் தெரியவருகிறது. பின்னே! சசிகலான்னா சும்மாவா? செயலலிதா காலத்தில், கட்சியிலும் அவர்தானே செயலலிதாவின் இயக்கம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.