Show all

வீரப்பனுக்கு விடுதலை! யானை தந்தம் கடத்தியதாக போடப்பட்ட வழக்கில் 18 ஆண்டுகள் கழித்து

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் அறங்கூற்றுமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல்காரராக குற்றஞ் சுமத்தப் பட்டாலும், தனி மனித காவிரி மேலாண்;மை வாரியமாகச் செயல்பட்டு வந்தவர் வீரப்பன். அவர் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர். இவர்கள் 5 பேரும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், ஆறுமுகம், சண்முகம், ஜவஹர், ராஜேந்திரன் உட்பட இந்தக் கடத்தலில் தொடர்புடையதாக வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளி சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் அறங்கூற்றுமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சொல்லப் பட்ட வீரப்பன், சந்திரகவுடா, கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் இறந்துவிட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பில், வனத்துறையினர் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால், (இறந்து விட்டார்கள் என்கிற காரணத்திற்காக அல்ல) ஆறுமுகம் தவிர மற்ற 6 பேரையும் விடுதலை செய்வதாகக் கூறி அறங்கூற்றுவர் குமாரசிவம் தீர்ப்பளித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,768.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.