சமூகமாக வாழ்ந்த தமிழர், சமூகம் விழாமல் இருப்பதற்கு உழவும், தொழிலும், வணிகமும்- உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு விழாவும் முன்னெடுத்துக் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையாக இன்று தமிழர் கொண்டாடி மகிழ்வது பொங்கல்விழாவாகும். இந்த இனிய பொங்கல் நாளில் உலகத்தமிழர் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 01,தை,தமிழ்த்தொடராண்டு-5122: உலக இனங்கள் பல்வேறு மதங்களையும், மார்க்சியம் போல அரசியல் கொள்கைகளையும் தங்கள் அடியொற்றி வாழ்வதற்கான தளமாக ஏற்றுக் கொண்டு- அவர்கள் சார்ந்த வகைக்காக அந்தந்த அமைப்புகளை தொடங்கி வைத்த, தனிமனித சான்றோர் பெருமகனார்கள் வகுத்துக் கொடுத்த சிந்தனைகளை விதியாக்கிக் கொண்டு இயங்கிவருகின்றன. தமிழ்இனம், சமூக இணைப்புக் கருவியாக அமைந்த தம்இன மொழியான தமிழை வளர்க்க, சான்றோர் பெருமக்கள் கூடி, அந்த வகைக்காக சங்கங்கள் கண்டு- தமிழ்மொழிக்கும், தமிழர் வாழ்க்கைக்கும் எழுத்து சொல் என்பனவான மொழி இலக்கணமும், அகம் புறம் என்பனவான வாழ்க்கைக்கான பொருள் இலக்கணமும் தமிழ்ச்சான்றோர் பெருமக்களின் கூட்டுச் சிந்தனையால் வகுத்தெடுத்த இலக்கிய இலக்கணங்கள் சார்ந்து வாழும் பாங்குடையது. சமூகமாக வாழ்ந்த தமிழர், சமூகம் விழாமல் இருப்பதற்கு உழவும், தொழிலும், வணிகமும்- உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு விழாவும் முன்னெடுத்துக் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையான விழாக்கள் சித்திரையில் புத்தாண்டு, ஆடியில் நீர்பெருக்கு, கார்த்திகையில் விளக்குத்திருவிழா, தையில் பொங்கல் பெருவிழா என்பனவாகும். இவை அனைத்தும் தமிழ் இனத்தின் உழவும், தொழிலும், வணிகமும்- விழாமல் இருப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று காப்புக்கட்டு தொடங்கி, இன்று பெரும் பொங்கல் கொண்டாட்டம்- அறுவைடையில் இருந்து கிடைத்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புதிய அரிசிகளை கொண்டு வெல்லம், நெய் மற்றும் பால் சேர்த்து புதிய மண்பானையில் பொங்கல் செய்வதே இன்று நமது முதன்மைக் கொண்டாட்டம் ஆகும். பொங்கல் மதம் சார்ந்த விழா கிடையாது என்கிற காரணம்பற்றி- தமிழ் நாட்டில் பெரும்பாலான கிருத்தவ தேவாலயங்களிலும், முஸ்லிம்களின் வீடுகளிலும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாகவுள்ளது. உலகின் சில நாடுகள் தைப்பொங்கல் நாளை, தமிழர் திருநாளாக அறிவித்துள்ளன. கனடா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பொங்கல் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவோம். தமிழர் திருநாளான பொங்கல் காப்புக்கட்டு, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பெருவிழாவாகும். காப்புக்கட்டு: தைப்பொங்கல்: மாட்டுப்பொங்கல்: காணும் பொங்கல்:
உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த புதிய பொருள்கள் அனைத்தையும் எடுத்து வருவதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள் மற்றும் வீடுகளில் உள்ள பொருள்களை எல்லாம் தூய்மை செய்து, வாசல்களில் மாட்டுசாணமிட்டு மேலும் வீடுகளை பீளைப்பூ, ஆவாரம்பூ, மற்றும் வேம்பு கொண்டு ஒப்பனை செய்வது இந்நாளின் வழக்கம். காப்புக்கட்டு விழாவை, மார்கழி மாதம் கடைசி நாளான நேற்று சிறப்பாகக் கொண்டாடினோம்.
இன்று தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் முதன்மை விழாவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. ஞாயிறுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவதால் இது ஞாயிறுபொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
நாளை உழவுத்தொழிலுக்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்போகிறோம். இந்நாளில் மாடுகள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டி தூய்மை செய்து, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தி, பொங்கல் செய்து அவற்றிற்கு படைத்து வணங்குவது வழக்கம். ஒரு சிலர் இந்நாளில் வீட்டு தெய்வத்தை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நாளில் தமிழர் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். மேலும் சல்லிக்கட்டு, கபடி, வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல் போன்ற வீர விளையாட்டுக்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என ஏராளமான விளையாட்டுப் போட்டிகள் இந்நாளில் நடத்துவது வழக்கம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.