பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்புகையில் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்பினார். மாலை 7 மணிக்கு வீட்டு முன் காரை நிறுத்தியபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இந்தக் கொடூர நிகழ்வு இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்தக் குடியிருப்பில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தும் அவை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தக் கொலையில், கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் துப்பு துலக்க பாட்னா காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.