பிக்பாஸ் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு கவின் மாதிரி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தப் பருவத்தில் வெளியேறிவிட்டார் இரம்யா பாண்டியன், என்ற செய்தி இணையத்தில் மிகுதியாகப் பகிரப்பட்டு வருகிறது. 29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4வது பருவம் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்நாளில் பிக்பாஸ் 4வது பருவத்தின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாசில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து இதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஆசைப்படுவது யார் என பிக்பாஸ் கேட்பார். அதுபோல் அப்பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த பருவத்தில் கவின் வெளியேறியதை பார்த்தோம். அதேபோல் இம்முறை பிக்பாஸ் ஒரு தொகை கொடுத்து போட்டியாளர்களைக் கேட்க, அதை எடுத்துக்கொண்டு வெளியேற இரம்யா பாண்டியன் முடிவு செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் திருப்பத்தை இரம்யா பாண்டியனின் கொண்டாடிகள் எதிர்பார்க்கவே இல்லை என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்தத் தகவல் உண்மையானதுதானா என்பது நாளை மறுநாளுக்குள் அதிகாரப்பாடாகத் தெரிந்து விடும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.