கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு பிள்ளையார் சதுர்த்தியின் போது சிலை வைக்கவோ ஊர்வலம் செல்லவோ சிலைகளை கரைக்கவோ அனுமதி இல்லை என்று அறிவிக்ப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்ட நடைமுறை- அண்மைக்காலமாகத்தான் தமிழகத்தில் புதிய ஹிந்துத்துவா கலாச்சாரமாக சிறியதாக தொடங்கி பெரியதாக வளர்ந்து வருகிறது. பலநூறு ஆண்டுகளாக பிள்ளையார் சதுர்த்தி என்பதாக- கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைப்பது என்கிற காரணம் அறியாத ஒரு விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் வடஇந்தியப் பாணியில் விநாயகர் சதுர்த்தி என்றாகி- தமிழகத்து மாரியம்மன் திருவிழா போல- ஊர்கூடி சிலை வைத்தல், ஊர்வலம் செல்லுதல், ஆற்றில் குளத்தில் சென்று சிலையைக் கரைத்தல் என்ற புதிய வழக்கம் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஹிந்துத்துவா கொண்டாட்டத்திற்கான நாள் எதிர்வரும் சனிக்கிழமை அன்று வருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதையோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கொண்டாட்டத் தேவைகளுக்கான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிந்திட வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகமூடி அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.