Show all

யார் முதல்வர் வேட்பாளர்! அதிமுகவில் கங்குகள் நெருப்பாகி எரியத் தொடங்கியுள்ள சிக்கல்

சசிகலாவா? பன்னீர் செல்வமா? என்ற பதவிப் போட்டியில் இடையில் வந்து பலனடைந்தவர்தானே எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவற்கு இனி வாய்ப்பு இல்லாத நிலையில், செயலலிதா அவர்களே முதல்வர் என அறிவித்த- நானே முதல்வர் என்பார் போல இருக்கிறது பன்னீர் செல்வம். இடையில் வந்த எடப்பாடியாரைக் கழட்டிவிட- யார் முதல்வர் வேட்பாளர் என்ற கலகத்தை தொடங்கி விட்டாரா பன்னீர் செல்வம்.

28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஒன்பது மாதங்களில் நடைபெறவுள்ளது. கருணாநிதி, செயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எனவே இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன. 

இந்த நிலையில் அண்ணா, காமராசர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, செயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சிக்கான வலுவான முகத்தை இறக்க முடிவு செய்துள்ளன. 

திமுகவுக்கு ஸ்டாலினை முன்னிலைப்படுத்தவே வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதிமுகவில் இந்த முடிவில் பல குழப்பங்கள் உள்ளன. அண்மையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைக்க, ராஜேந்திர பாலாஜியோ, எடப்பாடியாரே முதல்வர் என கீச்சுவில் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முதல்வர் வேட்பாளர் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் முதன்மை ஆலோசனை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. வரும் தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.