தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை இழந்து நிற்போருக்கு உதவ அரசு சிற்சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பேரளவாக தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக களத்தில் உதவி வருகின்றனர். இவ்வாறான உதவிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்த்து திமுக சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளது. வைகோ, கமல் போன்றோரும் அரசின் முறையின்மையைக் கடிந்து கொள்கின்றனர். மக்களும் அரசின் இந்தப் போக்கில் அதிருப்தி அடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. 31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவுவதைத் தடுக்கும் நோக்கமாக என்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை இழந்து நிற்போருக்கு உதவ அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக உதவ கட்டுப்பாடுகளை விதித்து, மறைமுகமாக தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதற்கு வைகோ, கமல் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், திமுக ஒருபடி மேலே சென்று, தன்னார்வலர்களுக்கு அரசு விதிக்கும் தடையை விலக்க வேண்டும் என சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் தன்னார்வலர்கள் பொருள்களை வழங்க தடை விதிக்கவில்லை என்றும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக கட்டுப்பாடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சுனாமி, பெருவெள்ளம், ஒக்கி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் வீடுகள், அன்றாட உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானவை. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது. ஆனால் தற்போது இந்த பேரிடர் கொடிய நுண்ணுயிரித் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது யாருக்கு யார் மூலம் பரவும், என தெரியாத நிலையில் நோய் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில்தான் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் இயல்பான நகர்வுகளுக்கும் தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் உதவி செய்பவர்களும் நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் அதேசமயம் நோய்த்தொற்று பரவுவதைத் தவிர்க்கவும் முறையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே புயல் வெள்ளம் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் உதவுவதுபோல் தற்போது உதவி செய்ய தொடங்கிவிட்டால் நோய்த்தொற்று தான் பரவும் என நலங்கு வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். அதனால்தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் அதை முறையாக வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாநகராட்சிகளில் மாநகராட்சி ஆணையரிடம், மண்டல அலுவலர்கள் இடமோ நகராட்சியாக இருந்த அந்த நகராட்சி ஆணையரிடம், பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடம், ஊராட்சி ஒன்றியமாக இருந்தால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கலாம். மேலும் இத்தகைய உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளையும் அணுகலாம். இதை விநியோகிப்பதற்கான அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம் தேவையான அனைவருக்கும் சென்றடையும் வகையிலும் தன்னார்வ அமைப்புகள் வழங்கும் மளிகை பொருட்கள், காய்கறிகள், சமைத்த உணவு மற்றும் பிற கட்டாயத்தேவைப் பொருட்களை அவர்கள் குறிப்பிடும் பகுதிகளுக்கு அல்லது குறிப்பிடும் நபர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இப்பணியில் தன்னார்வலர்களும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஈடுபடலாம். அதற்கான சம்பந்தப்பட்ட அலுவலரின் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதற்கு பொது மக்களும் மற்ற தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி மாநில அளவில் நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில் ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு இப்பணிகள் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே முதியோர், மாற்றுத்திறனாளிகள் நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர் போன்றோருக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கிட 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 58,000 தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்துகொண்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சமூக இடைவெளி மற்றும் பொது நலங்கு பாதுகாப்பு நெறி முறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கி கொண்டு தான் இருக்கின்றனர். ளவழிஉழசழயெ.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிவாரணம் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பதற்காக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மூலம் நிவாரணங்கள் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன. எனவே அரசின் நோக்கம் உதவி செய்வதை தடுப்பது அல்ல, தற்போதைய நோய்த்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிவாரண உதவிகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தமிழக அரசு கருத்தில் ஆயிரம் சொல்லலாம். தமிழக அரசு சொல்லும் இத்தனைக் கருத்துக்களுக்கும் களத்தில் கிடைக்கிற விடை என்னவோ காவல்துறையின் தடை மட்டுமாகவேயுள்ளது; அங்கே அரசு அதிகாரிகள் யாரையும் காணோம். அதனால் களத்தில் பசித்திருக்கும், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தாளில் சருக்கரை என்று எழுதித் தந்து சுவைக்கச் சொல்லுகிற கதைதான் இது. இந்த சூழ்நிலையில் தன்னார்வலர்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அதிகாரிகளை ஒத்துழைக்கச் சொல்லுங்கள். ஆனால் காவல்துறையினர் மூலமாக தடைபடுத்தாதீர்கள் என்கின்றனர் மக்கள்.
இதற்கு நியாய விலை கடைகளில் கூடும் கூட்டத்தை காரணம் காட்டி, நியாயப்படுத்தி பேசுவதும் சரியல்ல. நியாயவிலைக் கடைகள் அன்றாட வீட்டு தேவைப் பொருட்கள் மற்றும் இதர கடைகளில் கூடும் கூட்டத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ள இந்த அரசு அதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஏற்கனவே அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அரசு கேட்டுக்கொண்டுள்ளது தவிர யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாறாக விருப்பத்தோடு வரும் தன்னார்வலர்கள் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களில் நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு தேவைப்படும் பொது மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யத்தான் அரசு அறிவுறுத்தியது தவிர தடை விதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



