ஊரடங்கு பாதிப்பிற்கான நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்தார் லாரன்ஸ். தற்போது அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார். 28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று, நடுவண் அரசு முன்னெடுத்த ஊரடங்கால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பிற்கான நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்தார் லாரன்ஸ். தற்போது அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் ஊரடங்கு நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது. நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். நான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



