Show all

சொதப்பல்நீட் தப்பும் தவறுமாக முடிந்தது; தமிழக அரசு ஒன்று செய்யலாமே

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வை நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நேர்மையான முறையில் நடத்தி முடிக்கவில்லை. ஏராளமான குளறுபடிகளோடு தப்பும் தவறுமாக நடத்தி முடித்திருக்கிறது.  

நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்பட்ட பெரும் இன்னல்கள் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று தமிழக அரசுக்கும், நடுவண் அரசு இடைநிலைக்கல்வி வாரியத்திற்கும், கவன அறிக்கை  அனுப்பியுள்ளது. பல மையங்களில் விடைத்தாள்கள்;; நகல் எடுத்து கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நகல் எடுத்த விடைத்தாள்களை கணினி திருத்தி மதிப்பீடு செய்ய முடியாது. அவர்கள் தேர்வே எழுதவில்லை என்றே பதிவாகும்.

இந்த நிலையில் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் குளறுபடிகளையும், தப்பும் தவறுகளையும் மறைத்து மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான நேர்மையான, உண்மையான பட்டியலை சமர்பிக்க வாய்ப்பேயில்லை என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். 

தப்பும் தவறுமாக, குளறுபடிகளோடு நடத்தி முடிக்கப் பட்ட நீட் தேர்வு இரத்தாவதற்கான வாய்ப்பே அதிகம் என்று கல்வியாளர்கள் தெரிவித்து வரும்-

இந்த நிலையில் தமிழக மாணவர்கள் பாதித்து விடாமல் இருக்க தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய உபாயம் ஒன்று உண்டு. உடனடியாக மருத்துவக் கல்விக்கான, பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, வழக்கமான ஒரு கலந்தாய்வை மதிப்பெண் அடிப்படையில் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. ஆவன செய்யுமா? தமிழக அரசு 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,781.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.