பன்னீர்செல்வத்தின் சசிகலாவுக்கு எதிரான அதிரடி
பேட்டியைத்தொடர்ந்து அதிமுகவிலும், தமிழக மக்களிடையேயும் அசாதாரண சூழ்நிலை வலுத்துவருகிறது. இந்த
சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் நேற்று முன்தினம் மும்பையிலிருந்து
புறப்பட்டு சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் சந்திப்புக்குப்பின், அதிமுக
பொதுச்செயலாளர் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து,
இன்று தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்
மற்றும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
உள்ளிட்டோரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,
சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் செவ்வாய்கிழமையன்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாகவும்,
எந்த நேரத்திலும் ஆளுநர் அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது. மேலும்,
போயஸ் தோட்டத்தில் காவல்துறை பாதுகாப்பை குறைக்க காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் சென்னை வர ஆளுநர் உத்தரவு
பிறப்பித்துள்ளதாகவும், தமிழகத்தின் உச்சக்கட்ட பாதுகாப்பிற்கு 1,800 துணை ராணுவத்தினர்
வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



