Show all

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் நிபந்தனைகளோடு விலக்கிக் கொள்ளப் பட்டது

கடந்த 9 நாட்;களாக தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நிபந்தனைகளோடு வௌ;ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

போராட்டத்தைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் செப்டம்பர் 7 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறங்கூற்றுமன்றம் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

ஆனால், அறங்கூற்றுமன்றத்தின் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்ந்தது. இதில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்களையும், ஆட்சியர் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு இரவில் தங்கி விடிய விடிய போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், அறங்கூற்றுமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி டி.சேகரன், மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் வௌ;ளிக்கிழமை (செப்.15) நேரில் அணியமாகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வௌ;ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளான சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் அணியமாகினர்.

அவர்களிடம் அறங்கூற்றுவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களைப் கைப்பற்றி பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர். அரசு அலுவலகங்களைத் தனி நபர் சொத்துபோல பாவித்து செயல்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் இரவு, பகலாக தங்கி போராட்டங்களை மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கே அன்றி அரசு ஊழியர்களுக்கான ஓய்வு விடுதிகள் அல்ல. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்களுக்கான அதிபதியைப்போல அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மாநிலத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிவாரணம் கோரி விவசாயிகள் அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் அங்கு போராட்டத்தை தொடர்வதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பின்னரும் போராட்டத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்பாமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். சென்னையில் போராட்டம் நடத்திய சேப்பாக்கம் மைதானத்தின் அருகிலேயே அறங்கூற்றுமன்றம் உள்ளது. இருப்பினும் போராட்டத்தைக் கைவிட்டு அறங்கூற்றுமன்றத்தை அணுகாமல் இருந்ததன் மூலம் அறங்கூற்றுமன்றங்களையும், அறங்கூற்றுவர்ளையும் கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறீர்களா? என்று கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

மேலும், காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வது மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குத் தெரியாதா? எனவே எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றனர்.

அதற்குப் போராட்டக் குழு தரப்பில் அணியமான வழக்குரைஞர், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன் அறிக்கை இதுவரையில் பதிகை செய்யப்படவில்லை. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல கட்டங்களாக தொடர்ந்த பேச்சுவார்த்தையின் மூலம் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. எனவே காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக முறையான அறிவிப்பு வெளியிட்டு அதன் பின்னரே போராட்டத்தைத் தொடங்கினோம் என்றார்.

இதை ஏற்க மறுத்த அறங்கூற்றுவர்கள், அறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அழைப்;பாணை அனுப்பி அவரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடுவோம் என்று உத்தரவிட்டு விசாரணையை மீண்டும் சிறிது நேரம் ஒத்திவைத்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, போராட்டக்குழு தரப்பில் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

இதைப் பதிவு செய்த அறங்கூற்றுவர்கள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பகல் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் வரும் 21 அன்று உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் நேரில் அணியமாக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து அறங்கூற்றுமன்ற வளாகத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், அறங்கூற்றுமன்ற உத்தரவின்பேரில் போராட்டத்தைத் தாற்காலிகமாக நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அறங்கூற்றுவர்களிடம் எங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளோம். இதை ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுவர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலருடன் செப்டம்பர் 21 அன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என்று தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.