Show all

தூத்துக்குடியை அதிர்வுகளிலேயே வைத்திருக்க விரும்புகிறதா காவல்துறை! பிருந்தா கரத் உள்பட 1500 பேர் மீது வழக்கு

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. கூட்டம் நடத்த மதுரை உயர்அறங்கூற்றுமன்றக் கிளை உத்தரவின் பேரில் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி சிதம்பர நகரில் கூட்டம் நடந்தது. கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் பேசினார். இதில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் உயர்அறங்கூற்றுமன்றம்  விதித்த விதிமுறைகளை மீறியதாக பிருந்தா கரத், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட 1500 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 188 பிரிவின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.