Show all

நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு: சுப்ரமணியன் சுவாமி

தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

      தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

      தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் தரப்பில் சட்டமன்றஉறுப்பினர்கள் பலரும் சசிகலாவை முதல்வராக பொறுபேற்க வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என ஒரு பிரிவு சட்டமன்றஉறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

      இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து சும்பரமணியன் சுவாமி நேற்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

      இந்நிலையில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கீச்சகத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.