Show all

காவிரிக்காக கிரிக்கெட்டை ஒரேயொருமுறை தியாகம் செய்யலாமே! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் சென்னை போட்டியுடன் தொடங்கி சென்னை போட்டியுடனே முடிவடைகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே திடலில் மோதுகின்றன. 

கடைசி லீக் போட்டியான 56-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்த போட்டியானது சில சமயம் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் போட்டியாக கூட அமையலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் குவாலிபையர் சுற்றை தீர்மானிக்கும் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிடியில் இருக்கும்.

கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் ஒரிரு லீக் ஆட்டங்களுக்கு முன்பாகவே தனது கடைசி லீக் ஆட்டங்களை முடித்துவிடும். 

இந்த முறை அட்டவணை மாறாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை எதிரணியின் உள்ளூர் திடலிலேயே தான் விளையாடும். ஆனால், இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் திடலிலேயே விளையாடுகிறது. 

காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். 

வரும் செவ்வாய் அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டி. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் அரங்கம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க தொலைக்காட்சியில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் - ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும். ஒவ்வொரு ஆண்;டும் ஆனி மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதி பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிர்பந்திக்க வேண்டும். சல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி உத்வேகம்! 

இந்த ஒரே ஒரு போட்டியை அரங்கத்திற்கு சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ உழவர்களின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சோற்றை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை! இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். உங்கள் தொழில்கள் உட்பட! அந்த ஒரு நாள் அரங்கத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, இழப்போ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, சிஎஸ்கேக்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவின், நடுவண் அரசின், உலக அரங்கின், அறங்கூற்றுவர்களையும் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். சேப்பாக்கம் அரங்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியைக் காண விடிய விடிய வரிசையில் நின்று நுழைவுச்சீட்டு வாங்கி வைத்துள்ள ரசிகர்கள் யோசிப்பார்களா

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,746. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.