தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என அணைத்து பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவற்றிற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. www.annauniv.edu/tnea2018 என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இம்மாதம் 30-ம் தேதி கடைசி நாளாகும். இணையதள வசதி இல்லாதவர்களுக்கென பிரத்தியேகமாக 42 உதவி மையங்களை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் பதிவுசெய்யும்போதே அதற்கான பதிவு கட்டணத்தையும் செலுத்திவிடலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.250 கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.500 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க தேவையில்லை, இப்போதே பதிவு செய்து கொள்ளலாம். முடிவு வந்தபிறகு அரசு தேர்வுத்துறையில் இருந்து நேரடியாக மதிப்பெண் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டும் தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த வருடம் முதன் முதலாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.