திருவொற்றியூர்
எர்ணாவூர் கிராமத்தில் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும்
உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம்,
எர்ணாவூர் கிராமம், சுனாமி குடியிருப்பு எண் -3ல் வசித்து வரும் பழனி என்பவரின் மகள்
சிறுமி ரித்திகா என்பவரின் சடலம் 19.2.2017 அன்று திருவொற்றியூர் குப்பை மேட்டில் காவல்
துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். சிறுமி ரித்திகாவின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை
உடனடியாக தேடிக்கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி
உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு
நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த சிறுமி ரித்திகா குடும்பத்திற்கு எனது
ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர்
தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



