Show all

நல்ல முயற்சி- தமிழ்ப்பகுதிகளின் ஆங்கில எழுதும்முறை திருத்தம்!

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த அரசாணைக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தப் ‘பெயர் மாற்ற திட்டம்’ இப்போது திடீர் என்று வரவில்லை. பல மாதங்களாக திட்டமிட்டு, அதன்பின்தான் பெயர் மாற்றங்களை அறிவித்து இருக்கிறது அரசு. இதற்காக முன்பே மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல் ஆசிரியர்கள், வல்லுனர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் என்று முதன்மையான குழுவினரிடம் இதற்காக கருத்து கேட்கப்பட்டது. சென்னையில் சில ஆங்கில பெயர்களை மாற்ற வேண்டும் என்பதாக தொடங்கிய திட்டம். இதன் பின்பே தமிழ்நாடு முழுவதுமாக 1018 பெயர்களை மாற்றும் முடிவிற்கு வந்துள்ளது தமிழ்நாடு அரசு. 

அதிலும் சென்னையில் இருக்கும் கிண்டி (guindy) போன்ற ஆங்கில ஒலிப்பு மிகவும் வேறுபாடாக இருக்கும். இப்படியான பெயர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னையில்தான் இப்படி அதிகமான இடங்கள் உள்ளன. இதனால் சென்னையில் உள்ள இடங்களின் ஆங்கில பெயர்களை மாற்ற கவனம் செலுத்தி உள்ளனர். பல மாதங்களாக அரசு இந்த யோசனையில் இருந்தது என்கிறார்கள். 

சென்னையில் இருக்கும் பல இடங்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் எப்படி ஒலித்தார்களோ அப்படியே அவர்கள் ஆங்கிலத்தில் எழுதினார்கள். அவர்கள் தவறுதாலாகவே அப்படியெல்லாம் எழுதினார்களேயொழிய அதற்கெல்லாம் ஆங்கிலத்தில் ஏதும் இலக்கணம் எல்லாம் இல்லை. 

ஆங்கிலேயர்கள் தமிழ் அறியாமல், தாங்கள் புரிந்து கொண்ட வகையில் தமிழ்ப் பெயர்களுக்குக் கொடுத்த ஆங்கில ஒலிப்பை (ஸ்பெல்லிங்) மாற்ற வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்பொருட்டே ஆங்கிலத்தின் பொருளற்ற ஒலிப்புகளை தமிழ்ப்படுத்த வேண்டும் என்று அரசு முயன்று தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது தமிழ்ப் பெயர்களுக்;கான ஆங்கில ஒலிப்பு மாற்றப்பட்டு இருக்கிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மிக கடினமாக மற்றும் மிகவும் மாறுபட்டு இருக்கும் பெயர்களுக்கு முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆங்கிலம் தெரிந்தவர்களே கூட கிண்டி என்பதை (guindy) என்று எழுத தடுமாறுவார்கள். அப்படி இருக்கையில் சாதாரண மக்கள் ஆங்கிலப் பெயர்களை படிக்க அதிகம் சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பெயர்களை எளிமைப்படுத்தி இருக்கிறது அரசு. 

எழும்பூர் என்பதை நபஅழசந என்று ஆங்கிலேயர்கள் மட்டுமே சொல்லி வந்தனர். அதை தமிழ் ஒலிப்பிற்காக ஆங்கிலத்தில் எழுதுவதுதான் தமிழுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். இதனால் இதுபோன்ற இடங்களில் ஆங்கில எழுத்துக்களை அனைவரும் எளிதாக எழுத முடியும். அரசு குழப்பத்தை தவிர்க்க வேண்டும் இதன் மூலம் அரசு பணியாளர்களும் குழப்பத்தை தவிர்க்க முடியும். அதாவது அரசு ஆவணங்களில் சரியான வகையில் ஆங்கிலத்தில் ஊர் பெயர்களை எழுத முடியும். தமிழ்ப்பெயர்களின் ஒலிப்பிற்கு ஏற்றபடி பெயர்கள் இருந்தால், எளிதாக அதை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் புதிதாக நிறைய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த 1018 தமிழ்ப்பெயர்களின் சீரிய ஆங்கில் ஒலிப்பு முறையும் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆனால் ஆங்கிலேயேர்கள் முதன் முதலாக மாற்றி எழுதிய தமிழ்ப்பெயர் இவர்கள் பார்வைக்குப் படாமலே போனது மிகப்பெரிய வருத்தமே. அந்தப் பெயரும் இவர்கள் பார்வைக்குப் பட்டிருக்குமோயானால் தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்ளால் பொறிக்கப் படுவதாயிருந்திருக்கும். 

ஆங்கிலேயேர்கள் முதலாவதாக மாற்றி ஒலித்து எழுதிய தமிழ்ப்பெயர் நாவலந்தேயம் என்பதே ஆகும். அதை அவர்கள் இன்டியா என்று எழுதினார்கள். இந்தியாவை பாரதம் என்ற பெயர்மாற்ற வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுக்க அந்த வழக்கை மனுவாக நடுவண் அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் நகர்த்தியது அண்மையல் அந்த வழக்கிலும் “நாவலந்தேயம் என்ற தமிழ்ப் பெயரை ஆங்கிலேயர்கள் இந்தியா என்று புரிந்து கொண்டு” என்பது மறைக்கப்பட்டு  ஆங்கிலேயர்களால் இந்தியா என்று சூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர், தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை. ஏனெனில் அது தமிழர் நாவலந்தேயத்தை ஐரோப்பியர் நாவல இந்தியா என்று எழுத வந்த பெயராகும். தமிழக அரசு இந்தியாவை ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவலந்தேயம் என்று எழுதா விட்டாலும் இந்தேயம் என்று எழுத வேண்டும் என்று மாற்றத்தை 1019 தொடங்கியிருந்தால் தமிழக வரலாற்றுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

மாற்றாக இந்தியாவை, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சம்சுகிருதத்தின் பாரதம் என்ற சொல்லை தங்கள் மொழி இயல்புகளுக்கு ஏற்ப கொஞ்சமான மாற்றத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற கீழ்கண்ட 21 மொழிகளில் இந்தியா கீழ்க் கண்டவாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
1.அசாமிய மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 
2.பெங்காலி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,
3.போடோ மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,
4.டோக்ரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
5.குஜராத் மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
6.ஹிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
7.கன்னட மொழியில் இந்தியாவை பாரதா என்றும்,
8.காசுமீரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
9.கொங்கணி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,
10.மைதிலி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
11.மலையாள மொழியில் இந்தியாவை பாரதம் என்றும்,
12.மொய்தி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும்,
13.மராத்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
14.நேபாளி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
15.ஒரிய மொழியில் இந்தியாவை பாரதோ என்றும்,
16.பாஞ்சாபி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
17.சமசுகிருத மொழியில் இந்தியாவை பாரதம் என்றும்,
18.சந்தாளி மொழியில் இந்தியாவை பாரதோ என்றும்,
19.சிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,
20.தெலுங்கு மொழியில் இந்தியாவை பாரததேசமு என்றும்,
21.உருது மொழியில் இந்தியாவை பாரத் என்றும்,

22.தமிழ் மொழியில் மட்டும் இந்தியா இந்தியாவென்று அழைக்கப் படுகிறது.

வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள். இந்தியா என்ற சொல்லுக்கு வடமொழியில் குப்பை என்று பொருள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் வடமொழியினர். இந்தியாவை, ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள். காங்கிரஸ் கட்சியின் பெயர் கூட ஹிந்தியில் பாரதிய இராஷ்டிர காங்கிரஸ் என்றுதான் எழுதப் படுகிறது.

பா- என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு, ஒளி என்று பொருளாம். இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று குறிக்கிறதாம் வடமொழி. ஞாயிற்றுக்கு ‘பாநு’ என்ற பெயரும் வடமொழியில் உண்டாம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல்- திளைத்திருத்தல்’ என்ற பொருளாம். எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” என்று பெயர் விளங்க, இந்தியாவில் ஆரியர் வசித்த பகுதிக்கு பாரதம் என்ற பெயர் பெற்றதாக வடஇந்தியர்கள் சொல்லி மகிழ்கின்றனர்.

ஆக, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று பெயர் விளங்க காரணம் என்ன? தமிழகம் மட்டும் இந்தியா என்று அழைப்பதால் இந்தியா என்பது தமிழ்ச் சொல்லா? அப்படியானால் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களுக்குச் சொந்தமானதா? ஆரியர் வருகை, மற்றும் வடமொழி கலப்பால்தான் இந்தியா, பாரதமாகி இந்தியாவில் இத்தனை மொழிகளும் தோன்றக் காரணமானதா? அதனால்தான் இந்தியாவின் அனைத்து மொழியினரும் இந்தியாவை பாரதம் என்றே அழைத்துக் கொள்கின்றனரா? ஆங்கிலேயர் மற்றும் உலகினர் யாருக்கும் இந்தியாவின் ஆரிய வரவுக்கு முந்தைய தமிழ்இந்தியாவோடுதான் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டனவா?  அனைத்தும் உண்மைதான்! 

தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு- எந்த அயல் இயல்களும் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம், தமிழர்களே இந்தியாவின் ஒட்டுமொத்த நாகரிக மாந்தராக விளங்கி வந்தனர்.

இந்தியா என்பது பாரதம் என்ற பெயரிலோ இந்தியா என்ற பெயரிலும் கூட அதுவரை யாராலும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. 

குமரிக் கண்டம் முதல் இமயம் வரை தமிழர் தாராளமாக தாம் புழங்கி வந்த பகுதியை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

அது உலகம் முழுவதும் தமிழருக்கு வணிகத் தொடர்பு இருந்த காலம். தமிழர்களே உலகம் முழுவதும் கப்பல் செலுத்தி, தமிழகத்து முத்து, மயில்தோகை, ஏலம், மிளகு. மஞ்சள், மெல்லிய துணி வகைகள் ஆகியவற்றை விற்று வந்தார்கள். இந்தப் பொருள்களுக்கு மாற்றாக தமிழகத்தில் கிடைக்கப் பெறாத தங்கத்தை மட்டுந்தாம் பண்டமாற்றாக வாங்குவார்களாம் தமிழ் வணிகர்கள். அரபு நாட்டில் மட்டும் குதிரைகளை பண்டமாற்றாகப் பெற்றிருக்கிறார்கள் தமிழ் வணிகர்கள்.

எகிப்து நாட்டின் பேரழகி கிளியோபட்ரா தமிழக முத்துக்களைப் பாலில் ஊற வைத்து குளிப்பார்களாம். எகிப்து நாட்டு அறிஞன் தாலமி இந்தியா தன்னுடைய நாட்டின் செல்வத்தை ஒப்பனை பொருட்களை கொடுத்து விட்டு அளவில்லாத தங்கத்தைப் பெற்றுச் செல்வதாக புலம்பியதாக எகிப்து வரலாறு தெரிவிக்கிறது. கிளியோபட்ரா தமிழ்மொழி அறிந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

இவ்வாறாக உலகம்- 
தமிழர் இருப்பிடத்தை அறிய ஆர்வம் கொண்டிருந்த காலம்.

உலகினர் தமிழர் வானியலில், கடல்தொழில் நுட்பத்தில், கப்பல் கட்டுதலில், கடல்கடந்த வணிகத்தில் என்பனவான நாகரிகக் கூறுகளில் மலைத்திருந்த காலம்.

ஆனாலும் இந்தியா குறித்து ‘நாவலந்தேயம்’ என்ற அறிமுகம் மட்டுமே உலகினருக்கு இருந்தது.

அதைத்தான் உலகினர், ந்தேயம் -ந்தேயா - ஐனெயை என்று பதிவு செய்தனர்.

அமெரிக்காவில் ஐரோப்பியர் இந்தியாவைத் தேடியதும் அதன் பொருட்டே.

அப்படி இப்படி என்று நீண்ட காலத்திற்குப் பிறகு வாசுகோடகாமா இந்தியாவைத் தேடி வந்தடையும் போது-

ஆரியர் அராபியர் மகமதியர் எல்லாம் நுழைந்து கலந்து விட்டதால்,

அவர்கள் வணிகத் தொடர்புக்காகத் தேடிவந்த நாவல Indiaம் இல்லை. நாகரிகத் தமிழர் இல்லை.

பிந்தைய வரலாறு நாம் அறிந்ததுதானே.

ஆக, நாவலந்தேயம் என்ற சொல்லில் இருந்துதான் இந்தியா என்கிற சொல் வந்த நிலையில் தமிழர்கள் மட்டுமே இந்தியாவைப் போற்றிக் கொள்கின்றனர். உலகினர் இந்தியா குறித்து முதலாவதாக அறிந்தது நாவலந்தேயத்தையே. அதனால் உலகினரும் இந்தியா என்ற சொல்லையே போற்றிக் கொள்கின்றனர். 

தமிழ்நாடு அரசு இந்தியாவை ஆங்கிலத்திலும் தமிழிலும் நாவலந்தேயம் என்று எழுதா விட்டாலும் இந்தேயம் என்று எழுத வேண்டும் என்று மாற்றத்தை 1019 தொடங்கியிருந்தால் தமிழக வரலாற்றுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும். எனவே இதை முன்னெடுக்க தமிழ்நாட்டு அரசுக்கு வலியுறுத்துவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.