குடியரசு நாள் விழாவில் தமிழகத்தின் காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது எங்களுடைய தெய்வம்- புறப்பொருள் காட்டும் நானிலத்தின் ஐந்திணை வாழ்க்கை முறை முன்னெடுத்த அடையாளம் என்று பறைசாற்றியது. 11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியரசு நாள் விழாவில் தமிழகத்தின் காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது எங்களுடைய தெய்வம் புறப்பொருள் காட்டும் நானிலத்தின் ஐந்திணை வாழ்க்கை முறை முன்னெடுத்த அடையாளம் என்று பறைசாற்றியது. கோயிலில் கும்பல் கும்பலாக குவியும் தமிழர்கள்- பக்தி அடிப்படையிலான பாஜகவை நோட்டாவிற்கு கீழ் மதிப்பது ஏன் என்ற கேள்வி வட இந்திய பாஜகவினரின் மிகப்பெரும் ஐயமாகும். அதற்கு விடைதெரிவிக்கும் முகமாக- நீங்கள் ஹிந்துத்துவா என்ற தலைப்பில் முன்னெடுக்கிற தெய்வங்களோ வேதாந்த ஆபாசகதைகளின் அடிப்படைகளாகக் காட்டப்படுகிறது. எங்கள் தமிழர் தெய்வங்கள்- புறப்பொருள் காட்டும் நானிலத்தின் ஐந்திணை வாழ்க்கை முறை முன்னெடுத்த அடையாளங்கள்- என்று தெரிவிக்கும் முகமாகவோ என்னவோ தமிழக அரசு அய்யனாரை அழைத்து வந்திருக்குமோ குடியரசுநாள் விழா அணிவகுப்புக்கு என்றே எண்ணத் தோன்றுகிறது. இன்று 71வது குடியரசு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு நாள்விழாவில் தலைமைஅமைச்சர் மோடி, நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, டெல்லி ராஜபாதையில் இந்திய மாநிலங்களின் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது. 17 அடி உயரம் கொண்ட மாபெரும் சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.