பாஜக அரசியல்வாதி, சென்னை உணவுக்கடையில் அடாவடியில் ஈடுபட்ட காணொளி, இணையத்தில் தீயாகப்பரவி வருகிறது. 29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியில் பாஜகவை சேர்ந்தவராக தன்னை கூறிக் கொள்ளும் புருசோத்தமன், குடிபோதையில் உணவகம் ஒன்றில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். கோழி ஊண்சோறு பாட்டில் இந்த வம்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது காவல்துறையினர் வந்து பாஜகவை சேர்ந்தவர் என கூறும் புருசோத்தமனை அமைதிப்படுத்தி அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். ஆனால் அவரோ, நான் பெரிய போக்கிரி இல்லை. திருவல்லிக்கேணி பகுதி பாஜகவின் பகுதி செயலாளர். நாளைக்கு இந்த உணவகம் நடக்குமா? பாஜக ஆள்னா ஒரு மரியாதை இல்லையா? அமித்சா நேரடி உதவியாளருக்கு செல்பேசயில் அழைத்தால் என்ன ஆகும்? 1,000 பேர் அணியமாக இருக்கிறாங்க.. என்று போதையில் சகட்டுமேனிக்கு மிரட்டுகிறார் புருசோத்தமன். இந்த காட்சிகள் அடங்கிய காணொளிதான் இப்போது சமூக வலைதளங்களில் தீயாகப்பரவி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.