Show all

அதிமுக அலுவலகத்தில், செயலலிதா வெண்கலச் சிலை திறக்கும், எடப்பாடி-பன்னீர்

11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மறைந்த முதல்வர் செயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது.

ஓ.பன்னீர்செல்வமும்,எடப்பாடி பழனிசாமியும் மொத்த ஆட்டத்தையும் கலைத்து விட்டு இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கட்சியையும் ஆட்சியையும் கொண்டு வந்துவிட்டனர்.

இந்நிலையில் நாளை செயலலிதாவின் 70 வது பிறந்தநாளை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள செயலலிதாவின் வெண்கல சிலை நாளை திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.50 மணியளவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் செயலலிதாவின் சிலையை திறந்து வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, நமது புரட்சித் தலைவி அம்மா என்ற நாளேடும் நாளை வெளியிடப்படுகிறது. செயலலிதா சட்டமன்றத் தேர்தலில் அறிவித்த திட்டமான வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.