மருந்தை ஒரு மண்டலத்திற்கு அதாவது 48நாட்கள் எடுப்பது (உட்கொள்வது) தமிழ் மருத்துவத்தின் அனுபவமுறைதான். ஆனால் கண்டுபாவணையை (trial and error method) 48 நாட்களுக்கு முன்னெடுத்து இந்தக் கடைகளுக்கு ஊரடங்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது நம் தமிழக அரசு. 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மருந்தை ஒரு மண்டலத்திற்கு அதாவது 48நாட்கள் எடுப்பது (உட்கொள்வது) தமிழ் மருத்துவத்தின் அனுபவமுறைதான். ஆனால் கண்டுபாவணையை (trial and error method) 48 நாட்களுக்கு முன்னெடுத்து இந்தக் கடைகளுக்கு ஊரடங்கு தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறது நம் தமிழக அரசு. தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு தனியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தேநீர் கடைகள், கட்டாயத்தேவைப் பொருட்களை விற்கும் கடைகள் போன்றவை திறக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், நாளது 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (24.03.2020) முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலில் உள்ளது. தற்போது தளர்வுகளோடு 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லா கடைகளிலும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் சிப்பம் மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள் ), அழகுநிலையங்கள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, நுண்ணுயிரிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் நிறுவனங்களில், பணியாளர்கள் வாடிக்கையாளர்கள் முகமூடி அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான நுண்ணுயிரிக் கொல்லிகள் பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
1) தேநீர் கடைகள் (சிப்பம் மட்டும்)
2) அடுமனைகள் (சிப்பம் மட்டும்)
3)உணவகங்கள் (சிப்பம் மட்டும்)
4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6) பைஞ்சுதை, கட்டிடப்பொருட்கள் விற்கும் கடைகள்
7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8) செல்;பேசி விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12) கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13) சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
14) சிறிய துகில் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும்
15) மின் உரல், மின் ஆட்டுக்கல் பழுது நீக்கும் கடைகள்
16) தொலைக்காட்சிப் பெட்டி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
17) பெட்டி கடைகள்
18) ஏந்துப்பொருள் (பர்னீட்சர்) கடைகள்
19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20) உலர் சலவையகங்கள்
21) தூதஞ்சல் மற்றும் சிப்ப அஞ்சல்
22) லாரி புக்கிங் சர்வீஸ்
23) நகலகங்கள்
24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27) வேளாண் இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28) டைல்ஸ் கடைகள்
29) வண்ணச்சாந்து (பெயிண்ட்) கடைகள்
30) மின்பொருட் கடைகள்
31) ஊர்தி உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32) தோட்டச் செடி கடைகள்
33) மரக்கடைகள் மற்றும் ஒட்டுப்பலகை கடைகள்
34) மரம் அறுக்கும் கடைகள்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



