வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அந்த வகைக்காக நடப்பில் உள்ள 3தலைமுறை (3ஜி) சேவைகளை டெல்லியில் அடுத்த பத்து நாட்களுக்குள் நிறுத்தப் போகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, டெல்லி வட்டத்தின் வாடிக்கையாளர்களைத் தற்போதுள்ள 3தலைமுறைச் சேவையை 4தலைமுறைச் சேவைக்கு மேம்படுத்த நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. சேவைகளை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர, பத்து நாட்களுக்குள் உங்கள் பழைய செறிவட்டையை 4தலைமுறைச் சேவையாக மேம்படுத்தவும். இந்த புதிய விதி குறித்து இந்த டெல்லி வட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க, சேதிகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. வோடபோன்-ஐடியா 4தலைமுறை (4ஜி) மீது கவனம் செலுத்த விரும்புகிறது. அதனால் தான் நிறுவனம் கடந்த ஆண்டு பெங்களூர் மற்றும் மும்பையில் 3தலைமுறைச் சேவையை நிறுத்தியது. நிறுவனம் இப்போது டெல்லி வாடிக்கையாளர்களுக்குத் தங்களது அருகிலுள்ள வாடிக்கையாளர் மையத்தைப் பார்வையிடவும், அவர்களின் செறிவட்டையை 4தலைமுறைக்குத் தரமுயர்த்தவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அவர்கள் எந்தவிதமான இழப்பையும் தவிர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த சமயத்தில் வேறு நிறுவனத்திற்கு மாற விருப்பம் உள்ளவர்கள்- வேறு நிறுவனத்திற்கு என்ன? ஏர்டெல் அல்லது ஜியோவுக்கு மாற விருப்பம் உள்ளவர்கள் மாற்றிக் கொள்ளலாம். நிறைய தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஜியோவுக்காக ஊத்தி முடியாயிற்றே. தமிழக நிறுவனமான ஏர்செல் அதில் மூழ்கியதுதானே. ஏர்டெல் மட்டுந்தானே துணிச்சலாக எதிர்த்து நின்று போராடிக் கொண்டிருக்கிறது. உங்கள் ஆதரவு ஜியோவுக்கா? ஏர்டெல்லுக்கா? அல்லது வோடாபோன் ஐடியாவிற்கே ஆதரவு தந்து பார்ப்பது என்கிற நிலையா? டெல்லிவாழ் வோடாபோன் ஐடியா கூட்டணி நிறுவன வாடிக்கையாளர்கள் தீர்மானியுங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.