18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்;காடு ஊதிய உயர்வு வழங்க 6 வது ஊதியக்குழு செய்த பரிந்துரையை அமல்படுத்த அம்மாநில காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் சுமார் ஆறரை லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணித் துறை அதிகாரி சீனிவாசமூர்த்தி தலைமையில் ஊதிய குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீநிவாச மூர்த்தி தலைமையிலான 6 வது ஊதியக்குழு அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க, முதல்வர் சித்தராமையாவிடம் பரிந்துரைகளை இன்று வழங்கியது. மாநில அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று செயல்படுத்தும் போது ரூ.10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம், அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் உட்பட 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழிர்கள் சுமார் 73,000 பேருக்கும் பலன் கிடைக்கும். 5.73 லட்சம் ஓய்வுஊதியர்கள் குடும்பத்தினருக்கும் இந்த ஊதிய உயர்வு பலன் கொடுக்கும். சீனிவாச மூர்த்தி குழு தனது அறிக்கையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.17,000 மற்றும் அதிகபட்ச ஊதியமாக ரூ.1,50,600 மற்றும் படிகளை, நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஓய்வூதிய தொகை குறைந்தபட்சம் மாதம், ரூ.8,500மாகவும், அதிகபட்சம் ரூ.75,300மாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வை அரசு அறிவித்தால் அதை வைத்து எளிதாக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாக்குகளை ஈட்டிவிடலாம் என சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பாஜகவிடம் இருந்து நடுவண் அரசை கைப்பற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்கும் கடமையை முன்னெடுக்க, ஒவ்வொரு கட்சியும் ஈடுபாட்டுடன் முனைந்து வருகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,684
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.