Show all

எதிர்கட்சிகள் கிண்டல், போட்ட ஓட்டுக்கு வேலை பாரப்பா ஆதித்தியாநாத்! அப்புறம் கேட்கலாம் கருநாடகாவில் ஓட்டு

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தான் ஆளும் மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை விரட்டி அடித்தார்கள் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களால். இதனால் தேர்தல் கருத்துப் பரப்புதல் பாதியிலேயே முடித்துக் கொண்டு உத்திரப்பிரதேசம் புறப்பட்டார். 

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன், தூசுப்புயல் ஏற்பட்டு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் உ.பியில் மரங்கள் வேறோடு பெயர்ந்து விழுந்தன. வீடுகள் பல இடிந்தன, மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தூசுப்புயலில் சிக்கி 73 பேர் பலியானார்கள். அடுத்த இரு நாட்களுக்கு இந்த தூசுப்புயலும், மழையும் இருக்கும என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சொந்த மாநிலத்தில் மக்கள் மழையிலும் புயலிலும் சிக்கி மடிந்து கிடக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு இருந்தார். 

மண்ணின் மைந்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அது குறித்து கவலைப்படாத முதல்வர் ஆதித்யநாத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கின. கர்நாடக கருத்துப் பரப்புதலில் இருந்த ஆதித்யநாத்தை முதல்வர் சித்தராமையா கீச்சு மூலம் வெறுப்பேற்றினார். அவரின் பதிவில் மன்னிக்கவும் உ.பி. மக்களே உங்களின் முதல்வரின் பணி இப்போது கர்நாடகத்துக்கு தேவைப்படுகிறது. விரைவில் அங்கு வந்துவிடுவார், அவரின் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிவித்திருந்தார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பார் என

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து கர்நாடகவில் இருந்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இன்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கழண்டு கொண்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.