பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் நடுவண்
அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர்கள் தங்கள் 3 மாத பயண விவரங்கள் குறித்த
அறிக்கையை 13-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு
ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை
அவர் நியமித்தார். அமைச்சர்கள்
தங்கள் அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கடந்த 3 மாதங்களில் தங்களின்
பாராளுமன்ற தொகுதி உள்பட எங்கெங்கு பயணம் செய்தார்கள்? அப்படி பயணம் செய்யாதவர்கள்
டெல்லியில் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தார்களா? என குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். அமைச்சர்கள்
தங்கள் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சென்று மக்கள் சேவை செய்தார்களா? கடந்த
ஆண்டு நவம்பர் 8-ந் தேதி எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தினார்களா? தங்கள் அலுவலகங்களில் கோப்புகளை ஆய்வு செய்தார்களா?
என்பதை அறியவே இந்த அறிக்கை பெறுவதின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



