Show all

உலக அளவிலான தற்கொலையில் இந்தியா முதலிடம்

தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

     மன அழுத்தம், பொருளாதாரம், வேலையின்மை ஆகிய காரணங்களால் தற்கொலை முடிவை தேடிக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

     இந்நிலையில், தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

     இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

     இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2௦15-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா, சீனா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

 

 

 

2005 முதல் 2015 வரையிலான 1௦ ஆண்டுகளில் உலகம் முழுவதும் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 18.4விழுக்காடு அதிகரித்துள்ளது. உலகளவில் 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். 2015-ல் மட்டும் இந்தியாவில் 7,88,000 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

     உலகளவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

15 முதல் 29 வயதுடைய இளம் பருவத்தினரே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

     இந்திய அரசு மக்களிடம் வரி வாங்குவதில் காட்டுகிற ஆர்வம் மக்களை பொருளாதார மேம்பாடு அடையச் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.