மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு
ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர்
மிரட்டல் விடுத்துள்ளார். மேற்கு
மாநில முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பாரதிய
ஜனதா கட்சி மீது யவிமர்சனங்களை முன் வைத்து வருகிறார். சமீபத்தில்
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் இந்து மதத்தை
பற்றி எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று தௌவு படுத்தினார். தடையை
மீறி ஊர்வலம் சென்றதால் மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்
கிழமை நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. ஊர்வலம் நடத்துவதற்கு
சூரி காவல்துறையினர் அனுமதி தர மறுத்திருந்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதோடு
ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கலைத்ததாக காவல்துறையினர் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,
மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின்
யுவ மோர்சா அமைப்பு தலைவர் யோகேஷ் வர்ஷ்னே மிரட்டல் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது
தொடர்பாக யோகேஷ் கூறுகையில், ‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்
தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு, நான் ரூ.11 லட்சம் பரிசாகத் தருவேன். மம்தா
பானர்ஜி சரஸ்வதி பூஜை, ராம் நவமி கண்காட்சிகள், ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் ஆகியவற்றை அனுமதிக்கவே
மாட்டார். இப்ஃதார் நோன்பு ஏற்பாடு செய்வார். முஸ்லீம்களுக்கு ஆதரவாகவே இருப்பார்’
என்று தெரிவித்தார். மேற்குவங்க
முதல்-மந்திரிக்கு பகிரங்கமாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



