Show all

வரவு-செலவு திட்டத்தின் மூலம் பாஜக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அருண் ஜெட்லியின் வரவு-செலவு உரையின் மூலம் ஆளும் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணமாகி உள்ளது என்று முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் இறுதி முழு வரவு-செலவு என்பதால், பலவித எதிர்பார்ப்புகளை இந்த வரவு-செலவு எழுப்பி இருந்தது. வரவு-செலவு பதிகை முடிவடைந்த நிலையில், அது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர், இந்த வரவு-செலவு மிகவும் மோசமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை ஒருபோதும் மீட்க உதவாது என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவு குறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், வெற்று வர்ணனைகளைக் கொண்ட வரவு-செலவு அறிக்கை இது. தோல்வியடைந்த அரசு என்பதை இந்த வரவு-செலவு அறிவிப்பின் மூலம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிரூபித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கடந்த நிதியாண்டில் 3.25 இருந்த நிதிப்பற்றாக்குறை இந்த ஆண்டு 3.5 ஆக அதிகரித்து உள்ளது. இந்த வரவு-செலவு அறிவிப்பால் இந்தியா விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

விவசாய வருமானம் இரட்டிப்பு வரவு-செலவு குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மீனவர்களை ஏமாற்றும் வகையில் இந்த வரவு-செலவு அமைந்து உள்ளது. விவசாயம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய வருமானம் இரட்டிப்பாகப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்து உள்ளார். அவர் இந்த உலகத்தில் இருந்து தான் பேசுகிறாரா என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், 500 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று வரவு-செலவு உரையில் அறிவித்து இருக்கிறார் அமைச்சர் அருண் ஜெட்லி. இது நம்பும்படியாக இருக்கிறதா? பத்தாண்டு திட்டங்களில் அறிவிக்க வேண்டிய திட்டங்களை எல்லாம் ஓர் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் வெற்று அறிவிப்புகளாகத் தான் இருக்கப்போகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கம் போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே லாபம் தரும் வரவு-செலவு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு - அவங்க மட்டும் மகிழ்ச்சி அண்ணாச்சி!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,685

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.