சிறை சென்றாலும் செல்வேனே தவிர, அபராதத் தொகையை
செலுத்த மாட்டேன் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார் 5 கோடி ரூபாய் அபராத தொகையை இன்று மாலை 5 மணிக்குள்
வாழும் கலை அமைப்பு செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று கெடு விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து
கூறிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சட்டத்திற்கு எதிராக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடவில்லை
என்றும், ஒரு மரத்தை கூட வெட்டாத தாங்கள் எந்த காரணத்திற்காக அபராத தொகையை செலுத்த
வேண்டும். சிறை சென்றாலும் செல்வேனே தவிர, அபராதத் தொகையைச் செலுத்த மாட்டேன் என்று
தெரிவித்துள்ளார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
டெல்லியில் யமுனை ஆற்றின் வௌ;ளச் சமவெளி பகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு உலக கலாச்சார
திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. லட்சக்கணக்கானோர்
இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். யமுனா நதியின் சுமார் 1000 ஏக்கர் வௌ;ள சமவெளி அழிக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே
இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்துவரும் வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு
வழங்கியது தேசிய பசுமை தீர்ப்பாயம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



