புதிய வாகனங்களை
பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல்
கட்டாயமாகிறது. இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார
போக்குவரத்து அலுவலகங்களுக்கும் போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா சுற்றறிக்கை
ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழில்
ஆதார் எண், பான் எண், மொபைல்போன் எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



