Show all

1 லட்சம் காவல்துறையினர்! தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில்

1 லட்சம் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து பனிரெண்டாவது நாளாக டெல்லியில் போராட்டம் நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உழவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்திலும் ஆதரவைப் பெற்றள்ளது. இதையொட்டி 1 லட்சம் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு அறிவித்த கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த உழவர்கள் டெல்லியில் முற்றுகையிட்டு கடந்த பனிரெண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு திமுக அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிற உழவர்கள்  நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் திமுக, அதன் கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளதால் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், வேளாண் அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் முழுஅடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

முழு அடைப்பின் போது பொதுமக்களுக்குண்டான கட்டாயத்தேவைப் பொருட்கள் தடைபடாமல் கிடைக்கவும், எந்தவிதமான முறையற்ற நிகழ்வுகளும் நடைபெறாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சென்னையில் 7000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.