Show all

எண்ணிமமேடையில் வெளியாகிறதா! சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஒளிப்படம்

சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் எண்ணிமமேடையில் வெளியாவதைத் தொடர்ந்து சந்தானத்தின் படமும் அதேபோல் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இனி எண்ணிமமேடையில் ஒளிரும் படங்களை ஒளிப்படம் என்போம்.

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் எண்ணிமமேடையில் வெளியாக உள்ள நிலையில், சந்தானத்தின் படமும் அதேபோல் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை, கொரோனா ஊரடங்கு காரணமாக தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் திரைமேடையில் வெளியிட முடியாமல் இருக்கிறது. அதன் காரணமாகவும், இனி வரும் காலங்களில் எண்ணிமமேடைக்கு நல்ல வரவேற்பு இருக்கிற நிலையிலும், இந்தப்படத்த புதுமுயற்சியாக எண்ணிமமேடையில் வெளியிட உள்ளனர். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை எண்ணிமமேடையில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு கதைத்தலைவியாக வைபவி நடித்துள்ளார். 

இதுதவிர மேலும் சில படங்களையும் எண்ணிமமேடையில் வெளியிட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.