Show all

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்ச வருமானம் பார்க்கப் போகிறது வருமான வரித்துறை! அடுத்து ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்னவென்று அறிவதற்கானது இந்தக் கட்டுரை.

05,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களுக்கு, விஜய் தொலைகாட்சி நிறுவனம் வழங்கும் சம்பளத்தில் 30விழுக்காட்டு தொகை ஒன்றிய அரசின் வருமான வரித்துறைக்கு பிடித்தம் செய்யப்படும். ஆக இந்த நிகழ்ச்சியால் அதிக வருமானம் பார்க்கும் இடத்தில் இருப்பது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை.

விஜய் தொலைக்கட்சியில் நடந்து வந்த பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர், இறுதிச்சுற்றுக்கு வந்த ஆரி, பாலா, ரியோ, ரம்யா, சோமு ஆகிய ஐந்து பேர்களும் 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருக்கிறார்கள். மிகவும் குறைந்த நாள் அந்த வீட்டுக்குள் இருந்தவரென்றால் நடிகை ரேகாதான். முதல் வெளியேற்றத்திலேயே வெளியேறி விட்டார்.

சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சம்பளம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பெண் போட்டியாளர்களில் ரேகா, சனம் செட்டி இருவருக்கும் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் சம்பளம். இவர்கள் இருந்த நாட்களைக் கணக்கிட்டு அதில் 30விழுக்காடு வரி பிடித்தம் போக மீதியைப் பெற்றுக்கொண்டார்கள்.

அடுத்து சுசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 80,000 ரூபாய். அர்ச்சனா, ரம்யா பாண்டியன் இருவருக்கும் ரூ.75,000. கேப்ரியல்லாவின் ஒருநாள் சம்பளம் ரூ.70,000. அவர் இறுதிச்சுற்றில் இருந்து வெளியேற விரும்பிப் பெற்றுக் கொண்ட ஐந்து லட்சம் இதில் தனித்தொகை. சிவானிக்கு ரூ.60,000. நிசா, சம்யுக்தா, அனிதா சம்பத் மூவருக்கும் ரூ.40,000.

அடுத்ததாக, ஆண் போட்டியாளர்களில் ஆரிக்குத்தான் அதிக சம்பளம். இவரது ஒருநாள் சம்பளம் ரூ. 85,000. 105 நாட்களுக்குக் கணக்கிட்டு அந்தத் தொகையுடன் தலைப்பு வென்றதற்காக வழங்கப்படும் ஐம்பது லட்சமும் சேர்த்து வழங்கப்படும். மொத்தம் சேரும் தொகையில் வரி பிடித்தம் முப்பது விழுக்காடு போக மீதி கையில் கிடைக்கும்.

ஆரிக்கு அடுத்தபடியாக ரமேசின் சம்பளம் ரூ.60,000. பாடகர் வேல்முருகனுக்கு ரூ.50,000. ரியோவுக்கு ஒருநாளுக்கு ரூ.35,000. ஆஜித்துக்கு ரூ.15,000. பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, சோம் மூவருக்கும் நாளொன்றுக்கு ரூ.10,000 வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை தவிர்த்து நிகழ்ச்சியின் விளம்பர நிறுவனங்கள் விரும்பி வழங்கும் பரிசுப் பொருட்களும் சில போட்டியாளர்களுக்குக் கிடைக்கலாம். அது அந்தச் சூழலைப் பொறுத்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.