இணையத்தில் தீயாகிறது. டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் காணொளி. 03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திருமுடிவாக்கத்தில் டாஸ்மாக் முன்பாக அரசு பேருந்தை நிறுத்தச் சொல்லி கலாட்டா செய்த போதை ஆள் ஒருவர், பெரிய கல் ஒன்றை எடுத்து எரிந்து கண்ணாடியை நொறுக்கிய அடாவடி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமுடிவாக்கத்தில் தடம் எண் 55 அ அரசுப்பேருந்து பல்லாவரத்தில் இருந்து பழந்தாண்டலம் பகுதிக்கு இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்து திருமுடிவாக்கம் அருகே சென்ற போது குடி போதையில் இருந்த ஒரு ஆள் திடீரென்று பேருந்தை நிறுத்த சொல்லி அடம் பிடித்தார். ஓட்டுநர் நிறுத்தாமல் போக முயற்சி செய்யவே, பெரிய கல் ஒன்றை எடுத்து, அதை பேருந்தின் கண்ணாடி மீது வீசி எறிந்தார். அவ்வளவுதான். பேருந்து கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது. பேருந்தில் இருந்த ஓட்டுனர், நடத்துனர், மற்றும் பயணிகள் இந்த அடாவடியால் அதிர்ச்சியடைந்தனர். இந்த அடாவடியை எதிரே தேநீர் கடையில் இருந்த ஆட்கள் காணொளி எடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளி தீயாகி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.