13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தன்னுடைய கடின உழைப்பால் தற்போது மேலைத்திரை வரை கால் பதித்துள்ளவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரியங்கா சோப்ரா தலையில் கண்ணாடி குவளையை உடைக்கும் காணொளியைப் பதிவிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள் வீடுகளில் யாரும் முயற்சி செய்யாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு மோசமான நாளின் முடிவில், இந்த மோசமான முடிவை எடுத்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் பயத்தோடு என்ன ஆனது, ஏன் இப்படி செய்தார் என்று புலம்பி வருகின்றனர். சிலர் அது சர்கரைக் கண்ணாடி என்றும் கூறுகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,709
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



