Show all

குவிகின்றன பாராட்டுக்கள்! சர்கார் பட பாணியில் போராடி வாக்குரிமை பெற்றார் ஓர் இளைஞர்

ஓர் இளைஞர் சர்கார் பட பாணியில் போராடி வாக்குரிமை பெற்று வாக்களித்தது, இந்த சட்டமன்றத் தேர்தலின் சிறப்புச் செய்தியாகும்.

24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ஓர் இளைஞர் சர்கார் பட பாணியில் போராடி வாக்குரிமை பெற்று வாக்களித்தது, இந்த சட்டமன்றத் தேர்தலின் சிறப்புச் செய்தியாகும்.

இரமேசு என்ற ஓர் இளைஞர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990),  மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்யச் சென்றார். அப்போது அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்தியது தெரியவந்ததால் இரமேசு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் தான் இரமேசு என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் 49பி சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.