27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு குப்பைக் கதை தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று பகைவனாக நடித்த கிரண் ஆர்யா கூறியிருக்கிறார். நடன இயக்குனர் தினேஷ் கதைத் தலைவனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு குப்பைக் கதை படத்தில் பகைவனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்ஆர்யா. சின்னத்திரை தொடரில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் திரைப்பட அனுபவத்தை பகிர்ந்த போது: நான் சிறு அகவையாக இருக்கும் போதே எனக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே திரைப்படம் மீது எனக்கு காதல். கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார். அப்போதிலிருந்து என் திரைப்பட வாழ்க்கை தொடங்கி விட்டது. பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதைத் தலைவனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன். அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் பகைவன் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். படத்தில் என்னை நம்பி பெரிய கதை பாத்திரம் கொடுத்தார் இயக்குனர். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன். ஒரு குப்பைக்கதை படத்திற்கு பிறகு சுந்தர்சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் ஐயா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். ஒரு குப்பைக் கதை என் திரைப்பட வாழ்கையில் பெரிய திருப்புமுனை. அதற்காக எனக்கு வாய்ப்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.