Show all

சினிமா2கோம் எதிர்பார்த்த அளவில் லாபம் தராததால் காசோலை மோசடி வழக்கில் சேரன்

காசோலை மோசடி வழக்கில் இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இயக்குனர் சேரனின் சினிமா2கோம் என்ற திட்டத்தில், ராமநாதபுரம் பழனியப்பன் என்பவர் சேர்ந்திருந்திருந்ததாகவும், அதற்கென 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சேரனிடம் செலுத்தியிருந்தாகவும், ஆனால் எதிர்பார்த்த அளவில்  சினிமா2கோம் லாபம் தராத நிலையில்,

பழனியப்பன் தான் செலுத்திய தொகையை திரும்ப கொடுக்கும்படி சேரனிடம் கேட்க,

இதனையடுத்து சேரன், 

பழனியப்பனுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியுள்ளார்.

ஆனால், அந்தக் காசோலை வங்கியில் பணம் இல்லை என்று திரும்ப வந்துள்ளது.

 

இதனால் பழனியப்பன்; நீதிமன்றம் சென்றுள்ளார். இது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற

உத்தரவின்படி  மார்ச் 10-ம் தேதி சேரன் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.

 

நீதிமன்றம் குறிப்பிட்டபடி சேரன் இன்று நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி, சேரன் மற்றும் அவரின் மகள் நிவேதா பிரியதர்சினிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து,

வழக்கை வரும் ஏப்ரல் 13-ம்  தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.