விரைவில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட விருக்கிற பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் பேரறிமுகங்கள் யார்? தேடலைப் பற்ற வைத்திருக்கிறது பிக்பாஸ் முன்னோட்டக் காணொளி. 17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பேரறிமுக நடிகை சில்பா மஞ்சுநாத்திடம் அதிக சம்பளத்திற்கு கலந்துரையாடல் நடந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளில் பேரறிமுகமாக ஒளிபரப்பாகி வருகிறது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி. ஹிந்தியில் இதுவரை 13 பருவங்கள் முடிந்துள்ளன. தமிழில் 3 பருவங்கள் முடிந்துள்ளன. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது பருவம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. அண்மையில் இதன் முன்னோட்டம் வெளியாகி பிக்பாஸ் நான்காவது பருவம் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பிக்பாஸ் பருவம் 4 நிகழ்ச்சியில் ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற படங்களில் நடித்த கவர்ச்சி நடிகை கிரண் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. விலையுயர்ந்த புரணி பேசுதல் நிகழ்ச்சி என்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை.
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ பட கதைத்தலைவியான சில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் சில்பா மஞ்சுநாத் கலந்துக் கொள்வதற்கு சம்பளமாக ரூ.1 கோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



