Show all

அடுக்கு வீடு வேண்டாம்!

இன்று நாள்: 16,மாசி தமிழ்த்தொடராண்டு-5124. தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,538.

இடுக்கில் என்றாலும் தனிவீடாக இருக்கட்டும்.
இடுக்கு வீட்டிற்கு இரண்டாயிரமா வாடகை? என்றுதானே
சொந்த வீட்டுக்கு முனைந்தோம்.
அப்புறம் எதற்கு அடுக்கு வீட்டிற்கு ஐயாயிரம் பேணல் செலவு?
தமிழில் மொழிந்தால் வாய் மணக்காது என்று 
ஆங்கிலத்தில் வாய் கெப்பளிக்கிற மலரக்க குயிலக்காவே!
இதில்தான் ஏதோவொரு மோகத்தில் 
இடத்தில் நிற்காமல் காலத்தில் களித்திருக்கிறாய் என்றால்-
சொந்த இடத்தையும் அடுக்கில் வாங்கி
அடிப்படையில்லாமல் அந்தரத்தில் பிழைப்பதேன்?
கொப்பளிக்கும் வாயையும் அடகு வைக்கிற, 
அலங்கோலம் எதற்கு?
காலத்தில் களித்திருக்கிறோம் நாம்.
இடம் குறித்த புரிதல் 
ஒற்றைத் தமிழச்சி, தமிழனுக்கும் இல்லை.
இடம் என்பது உடைமை.
உரிமையான காலம் 
ஒருபோதும் தலைமுறை தொடராது.
முதலெனப்படுவது இடமும் காலமும் என்று
மொழிந்தவன் தமிழன்.
காலத்தில் மட்டும் களித்திருந்தால் எப்படி?
இடத்தில் இயங்க வேண்டாமா?
இயங்க இடம் வேண்டாமா?
முதலென தமிழன் நிறுவிய இடம்
வெளியாகும்.
வெளி கடந்தும் உள்ளும் இருப்பதால் 
அது கடவுள்.
கடவுளில் நமக்கான இடமே 
நமக்கான அதிகாரம்.
கடவுளில் நமக்கான இடமாக இருப்பது தமிழ் (எண்ணமொழி)
கடவுளில் முதலாவதாக பதிந்த மொழி தமிழ்
கடவுள் கற்றுக் கொண்ட முதலாவது மொழி தமிழ்
கடவுளில் தமழோடு பதிந்த எந்த மூலமொழியும் 
இப்போது இல்லை.
தமிழ் மட்டுமே மூலமொழியாகவும் 
நடப்பு மொழியாகவும் கடவுளில் இருக்கிறது.
புவியில் நமக்கான இடத்தில் 
புவியில் நமக்கான ஊரில்
புவியல் நமக்கான நாட்டில்
நமக்கான அதிகாரம் தமிழ்
அந்தரத்தில் வாழும் அடுக்கு மாடி வேண்டாம்
தங்கள் மூலமொழிகளுக்குத் திதிகொண்டாடி 
கெத்துகாட்டி ஏமாற்றும் அயல்மொழிகள் வேண்டாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.