Show all

இன்று கதிரவ மறைப்பு! எச்.இராஜா மற்றும் வீரமணி என்ன செய்யச் சொல்கின்றனர் நம்மை.

ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆண்டு விட்டு, தற்போது அவரவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு கொண்டு வருகின்றார்கள். இன்றைய கதிரவ மறைப்பில் இவர்களின் தாக்கம் முன்னெடுப்பது என்ன?

11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆண்டு விட்டு, தற்போது அவரவர்கள் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு கொண்டு வருகின்றார்கள்.

ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் கட்டி ஆண்டதால், தாராளமாக அறிவுப் பகிர்தலும், இன்றைய கணினி, இணையம் வரையிலான இயல்அறிவு (சயின்ஸ்) வளர்ச்சியும் சாத்தியமாகியுள்ளது. ஆரியர்கள் நீண்ட நெடுங்காலமாக இந்தியாவைத் தொடர்ந்து ஆண்டு வருவதால், மூடநம்பிக்கைகளின் மொத்த உருவமான பாஜக ஆட்சி நமக்குக் கிடைத்து இந்தியா இழிநிலையின் உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில்தான் இன்றைய கதிரவமறைப்பு ஆரியர்களாலும், ஐரோப்பிய இயல்அறிவு சார்பாளர்களாலும் இருவேறு நிலையாக மக்களிடம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

முதலாவதாக, இயல்அறிவு சார்பாளர்கள் சொல்லும் கதிரவமறைப்பு குறித்த செய்திகளைக் கவனிப்போம். கதிரவ மறைப்பு என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிரவன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும். எனவே முழுநிலவு நாளில் மட்டுமே கதிரவ மறைப்பு நிகழ்கிறது. கதிரவ வெளிச்சத்தை நிலவு முழுமையாக மறைக்கும் போது முழுமையான கதிரவ மறைப்பும் பகுதியளவாக மறைக்கும் போது பகுதி மற்றும் வளைய மறைப்புகளும் ஏற்படுகின்றன.

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. எனவே கதிரவ மறைப்பு நாளைத் தவிர மற்ற நாட்களில் பெரும்பாலும் நிலவின் நிழல் புவியின் மீது விழுவதில்லை.

கதிரவ மறைப்பின் போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது. அப்போது புவி இருக்கும் நிலையைப் பொறுத்து கதிரவ மறைப்பு எந்தெந்த இடங்களில் தென்படும் என்பதைக் கணிக்க இயலும்.

கதிரவனை நேரடியாகக் காண்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய பாதுகாப்புக் கருவிகளுடன் மட்டுமே கதிரவ மறைப்பைக் காண இயலும். ஆனால் முழுமையான கதிரவ மறைப்பு உச்ச நிலையை மட்டும் வெறும் கண்களால் காண இயலும். அதற்கு முன்பு அதன் உச்ச நிலை நேரத்தை முன்பே துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது 

அடுத்து கதிரவ மறைப்பு குறித்து ஆரியர்களின் கதைவிடலை கவனிப்போம். சூரிய கிரகணம் வந்தாலும் சரி, சந்திர கிரகணம் வந்தாலும் என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்பவைகளை ஒரு பட்டியலே போட்டு கொடுத்திருக்கின்றார்கள் ஆரியர்கள். சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, முதல் தூங்கும் நேரம்வரை குறித்து வைத்துள்ளனர். அதனை இன்றளவும் பெருமளவு மக்கள் கேள்வி கேட்காமல்  பின்பற்றி வருகின்றனர். 

ஆனால், கதிரவ மறைப்பு ஏற்படும்போது வழக்கமான நாட்களைப் போலவே சாப்பிடலாம், வெளியில் போகலாம்.. என்கின்றது இயல்அறிவுத்தளம். 

இதனால் கதிரவ மறைப்பின்போது சாப்பிடக்கூடாது என்ற ஆரியர் கருத்தினை உடைக்கும் முயற்சியில் திராவிடர் கழகம் இறங்கியது. இது தொடர்பாக ஒரு அறிவிப்பினையும் அக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை பெரியார் திடலில் கதிரவ மறைப்பின்போது உணவருந்தக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

இந்த அறிவிப்பு, மூடநம்பிக்கை திணிப்பாளர் எச்.இராஜா கண்ணில் பட்டுள்ளது. கழகம் சார்பாக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பினை எடுத்து தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டு இயல்அறிவுத் தளத்தைக் கடுமையாக சாடியுள்ளார். 

கதிரவ மறைப்பு குறித்து ஆரியர்கள் உட்கார்ந்த நிலையிலேயே கட்டமைத்த கதையைக் கவனிப்போம். தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமுதம் எடுப்பதற்காக பாற்கடலை கடைந்தார்கள். பாற்கடலில் இறுதியாக இறவா தன்மையை அளிக்கும் “தேவாமிர்தம்” கிட்டியது. இதை அசுரர்கள் உண்டு சாகாவரம் பெற்றுவிட்டால் எல்லோருமே துன்பப்பட நேரும் என எண்ணிய மகாவிஷ்ணு, “மோகினி” அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அவர்களின் கவனத்தை திசை திருப்பி அந்த தேவாமிர்தத்தை கொண்டு வந்து தேவர்களுக்கு விருந்தளித்தார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி அசுரர்கள் வருந்திய போது அந்த அசுரர்கள் கூட்டத்தில் “ஸ்வர்ணபானு” என்ற அரக்கன் இருந்தான். இவன் எந்த ஒரு தேவரோ அல்லது மனிதரை போன்ற உருமாறும் திறன் கொண்டவன். இந்த ஸ்வர்ணபானு தேவர்களின் உருவம் தரித்து விஷ்ணுவிடம் இருந்து தேவாமிர்தத்தை பெற்று உண்டு விட்டான். தேவர்கள் கூட்டத்தில் ஸ்வர்ணபானுவை கண்ட சூரியனும், சந்திரனும் ஸ்வர்ணபானு அரக்கர் குலத்தை சார்ந்தவன் என அவனை மகாவிஷ்ணுவிடம் காட்டிக்கொடுத்தனர். இதையறிந்த மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவின் தலையை கொய்தார். ஆனால் இறவா தன்மை கொண்ட தேவாமிர்தம் உண்ட காரணத்தினால் ஸ்வர்ணபானு இறக்காமல் அவனது “தலை பகுதி” “ராகுவாகவும்” “உடல் பகுதி” “கேதுவாகவும்” மாறியது. தன்னை காட்டிக்கொடுத்த சூரியன் மற்றும் சந்திரனை பழிவாங்க சூரிய, சந்திர கிரகங்களின் போது ராகு மற்றும் கேது “பாம்பு” போல் அவர்களின் வெளிச்சத்தை விழுங்குவதாக சொல்லி கதையை இன்று வரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயல்அறிவுத் தளத்தின் கண்டுபிடிப்பான கணினியில் அமர்ந்து கொண்டே எச்.இராஜா இணையத்தில் இந்தக் கதையைப் பதிவிட்டு நம்மை முடமாக்கி வருகின்றார்கள்.

மேலும் தொடர்கிறது கதை: இந்த கிரகண வேளைகளில் தேவ தன்மை வாய்ந்த மற்றும் உலகிற்கு நன்மைகள் அளிக்கும் சூர்ய மற்றும் சந்திர கிரக ஒளிரேகைகள், அசுர தன்மை கொண்ட ராகு கேது நிழல்களால் மறைக்கப்பட்டு இருள் சூழ்வதால் மெய்ஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான ரீதியாக இந்த பூமியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் இந்த கிரகண வேளைகளில் கோவில்கள் மூட படுகின்றன. மற்ற மங்கல நிகழ்ச்சிகள் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த நேரத்தில் ராகு மற்றும் கேது கிரகங்கள் சக்தி பெற்றிருப்பதால், இந்த இரு பகவான்களையும் சாந்திபடுத்தும் மந்திரங்களை, இந்த சந்திர கிரகணம் நடைபெறும் வேளையில் உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஜெபித்தால், இதனால் ஜாதகத்தில் உங்களுக்கு பாதகமான இடத்தில் இருக்கும் ராகு மற்றும் கேது கிரகங்களினால் ஏற்படும் கெடுதலான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,378.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.