Show all

எதிர்நிலைக் கருத்தாகக் கூட இராஜிவ் கொலைப்பழியை- தமிழர்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்! இலங்கை பா.உ

இராஜிவ் கொலைக்கான காரணத்தை துப்புதுலக்க வேண்டிய கட்டாயமோ, இராஜிவ் கொலைப்பழியை சுமக்க வேண்டிய தேவையோ தமிழர்கள் யாருக்கும் இல்லை. ஏனெனில் தமிழர் போற்றிக் கொள்ளும் விடுதலைப்புலிகளுக்கு இராஜிவ்கொலையில் தொடர்பு இல்லை என்பது உறுதியான தகவல் என்கிறார் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்.  

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜிவ் கொலைப்பழியை எதிர்நிலைக்கருத்தாகக் கூட (சீமானுக்கு அறிவுறுத்தும் வகையாக) தமிழர்கள் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது. 

மேலும், விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள். இராஜீவ்காந்தியைக் கொலை செய்ததாக ஒருபோதும் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே இராஜிவ் கொலைப்பழியை- தமிழர்கள் யாரும் விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி சுமக்க வேண்டிய தேவையில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இவ்வளவு காலத்திற்குப் பிறகும் தமிழர்கள் இது குறித்து பேசிக்கொண்டிருக்கும் வகையாக, உருவாக்கப்பட்டுள்ள நீர்பந்தம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,354.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.