Show all

சென்னையில் தனது உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது! நீல்சன்ஐக்யூ நிறுவனம். திறந்து வைத்தவர் நம்ம முதல்வர்

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமிழ் (விர்ச்சுவல்) முறையில் திறந்து வைத்தார், நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான நீல்சன்ஐக்யூவின் உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை சென்னையில். இந்தப் பேரளவு அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனராம்.

07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னையில், உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் நிலையில் நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான நீல்சன்ஐக்யூ திங்களன்று சென்னையில் தனது உலகின் மிகப்பெரிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.

இந்தப் பேரளவான அலுவலகத்தைத் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமிழ் (விர்ச்சுவல்) முறையில் திறந்து வைத்தார். அண்மையில் இந்தியாவின் 2வது பெரிய அமேசான் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்த கையோடு நேரில் சென்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீல்சன்ஐக்யூ உலகில் பல நாடுகளில் வணிகம் செய்து வரும் வேளையில் அதன் உலகளாவிய செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப மையத்தைச் சென்னையில் மிகப்பெரிய அலுவலகத்துடன் அமைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விடையமாக உள்ளது.
சென்னையில் அமைக்கப்படும் இந்தப் பேரளவு அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றக் கூடிய மையமாக, நீல்சன்ஐக்யூ இந்தியாவில் முதல் அலுவலகத்தை அமைத்துள்ளது. 

சென்னையில் உள்ள இப்புதிய அலுவலகம் அதன் ஆறு அலுவலகங்களில் ஒன்றாகும், மேலும் இந்தியாவில் இந்நிறுவனம் இந்தக்கிழமை இறுதியில் வதோதரா மற்றும் புனேவில் புதிய அலுவலகத்தையும் திறக்க உள்ளது. மற்ற மூன்று அலுவலகங்கள் போலந்து, மலேசியா மற்றும் மெக்சிகோ நகரங்களில் உள்ளன.

உலகளாவிய நுகர்வோர் தரவு தளமான நீல்சென்ஐக்யூ, வணிக மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சந்தை குறித்து முதன்மையான முடிவுகளை எடுக்கப் பல கோணங்களில் முதன்மைத்துவமான தரவுகளை அளிக்கிறது. நீல்சென்ஐக்யூ இந்தியாவில் மட்டும் அல்லாமல் சுமார் 100 நாடுகளில் வணிகத்தையும், சந்தை தரவுகளையும் கொண்டு உள்ளது.

இந்தியாவில் சென்னை உட்பட அமைக்கப்படும் 3 அலுவலகத்தில் சுமார் 5000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதை அடுத்த 15 மாதங்களில் செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளது நீல்சென்ஐக்யூ நிர்வாகம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,224. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.