தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். 03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப் பொருட்களை அனுப்ப உரிய ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள மடலில்: அண்மையில் ஒன்றியத் தலைமைஅமைச்சரை நேரில் சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன் தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப் பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,220.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.