Show all

என்னதான் காரணம்! 19 பேரை சரமாரியாக சுட்டு கொன்ற 18 அகவை மாணவன், தானும் தற்கொலை

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உருசியாவில் கல்லூரி ஒன்றில், விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் என்ற 18 அகவை மாணவர் கல்லூரிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உருசியாவின் கிரிமையாவின் கெர்ச் என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் 70 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். 

இவரது மனநிலை நன்றாகவே இருந்துள்ளது. உருசியாவில் மனநிலை சோதனை செய்த பின்தான் துப்பாக்கி வழங்குவார்கள். இவர் அந்தச் சோதனை எல்லாம் முடித்துவிட்டு தான் துப்பாக்கி வாங்கி உள்ளார். அதேபோல் கடைசியாக 19 பேரையும் சுட்டுவிட்டு அவர்களை கல்லூரி நூலகத்தில் தூக்கி கொண்டு சென்றுள்ளார். கடைசியில் அதே இடத்தில் வைத்து தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவின் தோழிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை இனி அவர் தோழி சொன்னால்தான் தெரியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,944.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.