Show all

திக், திக், திக்! வேற்றுக்கோள் மனிதர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை சோளப் பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற உழவர், இரண்டடி உயரமும், நீண்ட தலைமுடியும், சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக மிரண்டு ஓட்டம் பிடித்தார். ஊரில் உள்ளவர்களை அழைத்து வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. என்ற செய்தி பரவியது. 

இதன்பின்னர் சிலநாட்கள் கழித்து, அனுராதபுரம், பொலநறுவா ஊர்களுக்கு அருகில் இரவு வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதை பலரும் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இது பறக்கும் தட்டாக இருக்கலாம் என அங்கு ஆய்வு நடத்திய அதிகாரிகள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 

எந்த அளவிற்கு உண்மையென்று தெரியாத இந்தப் பீதிச் செய்திகளை இணைத்து: 

கீழ்கண்டவாறாகப் பரவும் தகவல்களால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் அயல்கோளைச் சேர்ந்த மனிதர்கள், இதுவரை உலகின் பல ஆய்வுளில் கூறப்பட்டு வந்த ஏலியன்கள்தாம் இவர்கள். தமிழர்கள் வாழும் பகுதியில் தொடர்ந்து ஏலியன்கள் சுற்றிரித்திரிக்கின்றனர். மேலும் அவர்கள் தமிழர்களுடன் நீண்ட தொடர்பில் இருந்து இருக்கலாம் என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். இரவு நேரங்களில் அயல்கோள்களில் இருந்து வந்து ஏலியன்கள் தனக்கு நெருங்கியவர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று கருதுகின்றனர். என்பது வரை செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.

மிக விரைவில் சுப்பரமணிய சாமியிடம் இருந்து: புலிகள் தலைவர் பிரபாகரன் அயல் கோள் மனிதர்களின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். இந்தியாவில் நாடளுமன்ற தேர்தல் நடபெற இருப்பதைத் தெரிந்து கொண்டு, பாஜகவிற்கு எதிராக களம் அமைக்க, இலங்கையில் இருந்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்திய ராணுவம் விழித்துக் கொள்ள வேண்டும். சல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் ஆகியவற்றில் ஊடுருவி இருந்த தேசவிரோத சக்திகளுக்கு இதில் தொடர்பிருக்கிறது என்ற புனைக்கதை விரைவில் வெளியாகலாம், என்று தமிழ் உணர்வாளர்கள் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவிற்கு எதிராக இந்தப் புனைக்கதையை பாஜக தரப்பிலிருந்து பரப்ப வாய்ப்பு இருக்கிறது என்றும், ஸ்டாலின் திருப்பூரில் துறைமுகம் அமைக்க வாக்குறுதி அளித்ததாக பொய்ச்செய்தியை இணையத்தில் பதிவிட்டவர்கள்தானே பாஜகவினர் என்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக என்ன வகையான அதிரடிகளும் நடக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,055.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.